திருச்சி அகதிகள் முகாமில் மோதல்: 9 பேர் கைது
Subscribe to Oneindia Tamil
திருச்சி: திருச்சி அகதிகள் முகாமில் கோஷ்டி மோதல் ஏற்பட்டு பலர் காயமடைந்தனர். இச் சம்பவம் தொடர்பாக 9 இலங்கைத் தமிழர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இடத்தை பகிர்ந்து கொள்வது தொடர்பாக சந்தானலிங்கம் என்பவருக்கும் ராஜா என்பவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் இருவருக்கும் ஆதரவாக சிலர் இறங்கி அடிதடியில் ஈடுபட்டனர்.
இத் தாக்குதலில் பலர் காயமடைந்தனர். சம்பவம் குறித்து அறிந்த போலீசார் விரைந்து வந்து மோதலில் ஈடுபட்ட ராஜா, ராஜன், கதீஸ்வரன், ஈஸ்வரன், சாந்தலிங்கம் மற்றும் அவருடைய மகன்கள் சுதர்சன், சுதீவன், ரஜினிகாந்த், வினோத்குமார் ஆகியோரை கைது செய்தனர்.
பின்னர் அவர்கள் அனைவரும் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர்.












Click it and Unblock the Notifications