For Daily Alerts
Just In
ம.பி.யில் லாரி விபத்தில் சிக்கி 9 பேர் பலி
நரசிங்பூர்: மத்திய பிரதேசத்தில் வளைவு ஒன்றில் திரும்ப முயன்ற லாரி, விபத்துக்குள்ளானதில் 9 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 3 பேர் படுகாயம் அடைந்தனர்.
மத்திய பிரதேச மாநிலம், கடர்வாரா மாவட்டத்தில் பொஹானி என்ற இடத்தில் நேற்றிரவு நிலக்கரி ஏற்றி வந்த லாரி வளைவு ஒன்றில் திரும்ப முயலும்போது சாலையோரம் உள்ள டீக்கடையில் நின்று கொண்டிருந்தவர்கள் மீது மோதியது.
இதில் டீக் கடையில் இருந்த 9 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர். 3 பேர் பலத்த காயமடைந்து உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
Comments
Story first published: Thursday, November 1, 2007, 13:26 [IST]