For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

காதல் மனைவியை உயிரோடு எரித்துக் கொன்ற கணவர்

By Staff
Google Oneindia Tamil News

சென்னை: காதலித்து மணந்து கொண்ட மனைவியின் நடத்தை மீது சந்தேகப்பட்ட கணவர் அவரை உயிரோடு தீவைத்து எரித்துக் கொடூரமாக கொன்றார். அவரை போலீஸார் கைது செய்துள்ளனர்.

மயிலாப்பூர் டொம்மி குப்பம் பகுதியைச் சேர்ந்தவர் நவீன். கார் டிரைவராக இருக்கிறார். இவரது மனைவி ஷீபா. இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.

திருமணமாகி 5 ஆண்டுகளாகிறது. இருவருக்கும் குழந்தை இல்லை. ஷீபா பட்டதாரி ஆவார். ஆங்கிலத்தில் திறமையானவர். இதனால் அருகில் உள்ள பள்ளிக்கூடத்தில் ஆங்கில ஆசிரியையாக வேலை பார்த்து வந்தார். இதனால் மனதுக்குள் நவீனுக்கு தாழ்வு மனப்பான்மை உருவாகியுள்ளது.

மேலும், குடிப்பழக்கத்திற்கும் அவர் அடிமையாகியுள்ளார். தினசரி குடித்து விட்டு வீட்டுக்கு வருவார். மனைவியை அடித்து உதைப்பார். அவரது நடத்தையிலும் சந்தேகப்பட்டு திட்டுவாராம்.

இருப்பினும் போதை தெளிந்த பின்னர் தனது செயலுக்காக வருந்தி ஷீபாவிடம் மன்னிப்பு கேட்பாராம்.

இந்த நிலையில் நவீனுடன் ஏற்பட்ட தகராறு காரணமாக கோபித்துக் ெகாண்டு ஷீபா தனது பெற்றோர் வீட்டுக்குப் போய் விட்டார். நவீன் போய் கூப்பிட்டுப் பார்த்தும் வரவில்லை.

ஆனால் நவீன் மிகவும் வற்புறுத்திக் கேட்டதால் ஷீபா வீட்டுக்குத் திரும்பினார். இரவில் அவர் தூங்கிக் ெகாண்டிருந்தபோது, நவீன் எழுந்து ஏற்கனவே வாங்கி வைத்திருந்த அமிலத்தை எடுத்து அவர் மீது ஊற்றினார். அமிலம் உடலில் பட்டதால் அலறித் துடித்தார் ஷீபா. ஆனாலும் விடாத நவீன், அவரது உடலில் தீவைத்து விட்டு தப்பி விட்டார்.

உடல் முழுவதும் பரவிய தீயால் துடித்த ஷீபா, வெளியே ஓடி வந்து கதறித் துடித்து கூக்குரலிட்டார். இதைப் பார்த்த அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து ஷீபாவை மீட்டு தீயை அணைத்து மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர்.

கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

மனைவியை எரித்துக் ெகான்று விட்டு தப்பி ஓடி தலைமறைவான நவீனை போலீஸார் தீவிரமாக தேடி வந்தனர். இந்த நிலையில் நவீனே காவல் நிலையத்திற்கு வந்து சரணடைந்தார்.

அவரிடம் போலீஸார் விசாரணை நடத்தியபோது, ஷீபா, தான் வேலை பார்த்து வந்த ஆசிரியர் ஒருவருடன் கள்ளத் தொடர்பு வைத்திருந்ததாக சந்தேகப்பட்டேன். இதுகுறித்து அவரிடம் கேட்டபோது அவர் திமிராக பதிலளித்தார். இதனால் ஆத்திரத்தில் அவரை கொன்று விட்டேன் என்றார்.

ஆனால் போலீஸ் விசாரணையின்போது ஷீபாவுக்கு அப்படி எந்த கள்ளக்காதலும் இல்லை என்று தெரிய வந்ததாம்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X