தமிழ்ச்செல்வன் கொல்லப்பட்டதை எதிர்த்து ஆர்ப்பாட்டம்
Subscribe to Oneindia Tamil
திருச்சி: விடுதலைப் புலிகளின் அரசியல் பிரிவு தலைவர் தமிழ்ச் செல்வனை கொன்ற இலங்கை ராணுவத்தை கண்டித்து புதிய தமிழகம் கட்சியின் சார்பில் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
திருச்சி கலெக்டர் அலுவலகம் முன் நடந்த இந்த போராட்டத்துக்கு புதிய தமிழகம் கட்சியின் மாவட்டச் செயலாளர் ஆர்.இளங்கோவன் தலைமை தாங்கினார்.
இதில் சுப.தமிழ்ச் செல்வனை கொன்ற இலங்கை ராணுவத்தை எதிர்த்தும், இலங்கையில் பட்டினியால் வாடும் தமிழர்களுக்காக திரட்டப்பட்ட நிவாரண பொருட்களை செஞ்சிலுவை சங்கம் மூலமாக அனுப்ப எந்த முயற்சியும் எடுக்காத மத்திய, மாநில அரசுகளை கண்டித்தும் கோஷங்கள் எழுப்பப்பட்டன.
மேலும் இலங்கை விவகாரத்தில் விஷயத்தில் மத்திய, மாநில அரசுகள் தலையிட்டு தீர்வு காண முயல வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டது.












Click it and Unblock the Notifications