திருச்செந்தூரில் கந்தசஷ்டி விழா: சிறப்பு ஏற்பாடுகள்

Subscribe to Oneindia Tamil

திருச்செந்தூர்: திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் கந்தசஷ்டி விழாவையொட்டி சிறப்பு பேருந்துகள் விட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

கந்தசஷ்டி திருவிழா வருகிற 10ம் தேதி (சனிக்கிழமை) தொடங்கி 16ம் தேதி வெள்ளிக்கிழமை முடிவடைகிறது. விழாவை முன்னிட்டு திருவிழாவுக்கு வருகை தரும் பக்தர்களுக்கு அடிப்படை வசதி செய்து கொடுப்பது சம்பந்தமாக அனைத்து அரசு துறை அதிகாரிகளின் ஆலோசனை கூட்டம் திருச்செந்தூர் சுப்பிரமணிசுவாமி கோவில் வாளகத்தில் நடந்தது.

கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் அர.பழனியாண்டி தலைமை தாங்கினார். கோவில் நிர்வாக அதிகாரி ராமராஜூ, திருச்செந்தூர் உதவி கலெக்டர் மருதநாயகம், உதவி போலீஸ் சுப்பிரண்டு சாமிதுரை, கோவில் அறங்காவலர் குழு உறுப்பினர் வக்கீல் சு.கு.சந்திரசேகர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

விழாவுக்கு வருகை தரும் பக்தர்களுக்கு தரமான குடிநீர் வழங்க தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் மற்றும் திருச்செந்தூர் நகர பஞ்சாயத்து நிர்வாகம் மூலம் தினமும் 1 லட்சம் லிட்டர் குடிநீர் வழங்கவும், கந்தசஷ்டி விழாவின் சிகர நிகழ்ச்சியான சூரசம்காரத்தன்று 2 லட்சம் லிட்டர் குடிநீர் வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

பக்தர்கள் அதிகம் கூடும் பகுதிகளில் தற்காலிக குடிநீர் பந்தல் அமைத்து சின்டெக்ஸ் குடிநீர் தொட்டி முலம் தரமான குடிநீர் வழங்கிடவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பக்தர்களின் வசதிக்கு ஏற்ப 60 தற்காலிக கழிப்பிடம் அமைக்கவும் முடிவு செய்யப்பட்டது.

திருவிழாவுக்கு பல்வேறு மாவட்டங்களில் இருந்து வருகை தரும் பக்தர்களின் வசதிக்காக கூடுதலாக 250 சிறப்பு பஸ்கள் அரசு போக்குவரத்து கழகம் மூலம் இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

கோவில் வாளகத்தில் பக்தர்கள் பயமின்றி, பாதுகாப்புடன் தரிசனம் செய்ய கூடுதலாக 1200 போலீஸ் அதிகாரிகள் மற்றும் போலீசார் முலம் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்வது ஆகிய முடிவுகள் எடுக்கப்பட்டன.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+