மோடியைக் கைது செய்ய பெரியார் தி.க. கோரிக்கை
Subscribe to Oneindia Tamil
திருச்சி: குஜராத் வன்முறைக்கு காரணமான அம்மாநில முதல்வர் நரேந்திர மோடியை கைது செய்யவேண்டும் என்று பெரியார் திக வலியுத்தியுள்ளது.
திருச்சியில் பெரியார் திக ஆலோசனை கூட்டம் நடைபெர்றது. இந்த கூட்டத்திற்கு மாவட்ட தலைவர் ராஜேந்திரன் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் இருளாண்டி முன்னிலை வகித்தார்.
இலங்கையில் உள்ள தமிழ் மக்களுக்கு உணவு, மருந்துகளை இந்நிய செஞ்சிலுவை சங்கம் மூலம் வழங்க தடை போடும் மத்திய அரசை வன்மையாக கண்டிக்கிறோம்.
குஜராத்தில் நடந்த வன்முறை கலவரங்களுக்கு காரணமான நரேந்திர மோடியை கைது செய்ய வேண்டும்.
திருச்சியில் பல இடங்களில் ஆக்கிரமிப்புகள் இன்றும் அகற்றப்படாமல் உள்ளது. அதை உடனே அகற்ற வேண்டும்.
நகர எல்லைக்குள் கட்டுப்பாடு இன்றி செல்லும் பஸ் டிரைவர்கள் மீது உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.












Click it and Unblock the Notifications