கூடுதல் கட்டணம் வசூலித்த 3 ஆம்னி பஸ் புரோக்கர்கள் கைது
சென்னை: சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் பயணிகளிடம் கூடுதல் கட்டணம் வசூலித்த 3 ஆம்னி பேருந்து புரோக்கர்களை போலீஸார் வளைத்துப் பிடித்துக் கைது செய்தனர்.
தீபாவளியையொட்டி சென்னையிலிருந்து தென் மாவட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு ஊர்களுக்கு செல்லும் ஆம்னி பேருந்துகளில் மிக மிக அதிக அளவில் கட்டணம் வசூலிக்கப்படுவதாகவும், பயணிகள் இதனால் பெரும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளதாகவும் புகார்கள் கிளம்பியுள்ளன.
ரயில்களில் கூட்டம் நிரம்பி வழிவதை சாதகமாக பயன்படுத்திக் கொண்டு அப்பாவி ஜனங்களிடம் ஆம்னி பேருந்துக்காரர்கள் பல மடங்கு கூடுதலாக டிக்கெட் வசூலிப்பதாக புகார் கூறப்படுகிறது.
இதையடுத்து சென்னை கோயம்பேடு வெளியூர் பேருந்து நிலையத்தில் கடந்த 2 நாட்களாக போலீஸாரும், ஆர்.டி.ஓ. அலுவலக அதிகாரிகளும் சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த நடவடிக்கையின்போது வெளியூர் செல்ல டிக்கெட் எடுத்துத் தருவதாகவும், கூடுதல் கட்டணம் தருமாறும் கேட்ட 3 புரோக்கர்கள் போலீஸ் பிடியில் சிக்கினர். அவர்களைப் போலீஸார் கைது செய்து காவல் நிலையம் கொண்டு சென்றனர்.
இதை பத்திரிக்கையாளர்கள் படம் பிடிக்க முயன்றபோது புரோக்கர்கள், பத்திரிக்கையாளர்களைப் பார்த்து திட்டினர், அடிக்கவும் பாய்ந்தனர். ஆனால் போலீஸார் தடுத்து அவர்களை காவல் நிலையத்திற்குக் கொண்டு சென்றனர்.
சிக்கியது 3 பேர்தான், ஆனால் பெருமளவிலான புரோக்கர்கள், கோயம்பேடு பேருந்து நிலையத்தில் மட்டும் அல்லாமல் எழும்பூர், தி.நகர், கிண்டி, தாம்பரம் அருகே பெருங்களத்தூர் உள்ளிட்ட பல இடங்களில் சுதந்திரமாக பண வசூலில் ஈடுபட்டிருப்பதாக பொதுமக்கள் கூறுகிறார்கள்.
-
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு -
"16 ஆண்டுகளுக்கு பின் தாய் வீட்டிற்கு.." வேல்முருகன் எமோஷ்னலாக சொல்ல.. சட்டென குறுக்கிட்ட அன்புமணி -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம்












Click it and Unblock the Notifications