'தமிழ்செல்வன்': தீபாவளியை புறக்கணித்த அகதிகள்!
Subscribe to Oneindia Tamil
கரூர்: விடுதலைப் புலிகள் இயக்கத்தின் அரசியல் பிரிவு தலைவர் சுப.தமிழ்செல்வன் படு கொலையை கண்டித்து கரூரில் உள்ள இலங்கை அகதிகள் முகாமில் தீபாவளியைக் கொண்டாடாமல் புறக்கணித்தனர்.
கரூரை அடுத்த ராயனூரில் இலங்கை அகதிகள் முகாம் உள்ளது. அதில் 1000 க்கும் மேற்பட்டோர் தங்கியுள்ளனர். இவர்கள் வழக்கமாக தீபாவளியை பட்டாசு வெடித்துக் கொண்டாடுவது வழக்கம்.
ஆனால் இந்த ஆண்டு கரூர் அகதிகள் முகாமில் தங்கியுள்ள அகதிகள், தீபாவளியைக் கொண்டாடமல் புறக்கணித்தனர்.
தமிழ்செல்வன் படு கொலையை கண்டித்தும், அதற்கு இரங்கல் தெரிவிக்கும் வகையிலும் தீபாவளியைக் கொண்டாடாமல் புறக்கணித்ததாக அகதிகள் தெரிவித்தனர்.
இருப்பினும் குழந்கைளை மட்டும் தீபாவளி கொண்டாட அணுமதித்தனர். தீபாவளியை அகதிகள் கொண்டாடாததால் முகாம் அமைதியாக காணப்பட்டது.












Click it and Unblock the Notifications