முல்லை பெரியாறில் புதிய அணை: தடுக்க ஜெ. கோரிக்கை

Subscribe to Oneindia Tamil

சென்னை: முல்லை பெரியாறில் புதிய அணை கட்ட முயலும் கேரள அரசின் முயற்சியை தமிழக அரசு தடுத்து நிறுத்த வேண்டும் என்று அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில், தென் மாவட்டங்களின் உயிர் நாடிப் பிரச்சனையாகவும், விவசாயிகளின் வாழ்வாதாரமாகவும் விளங்கி வருகின்ற முல்லை பெரியாறு அணையின் நீர் மட்டத்தை கேரள அரசு 152 அடியிலிருந்து 136 அடியாக குறைத்துவிட்டது.

முல்லைப் பெரியாறு அணையின் நீர் மட்டத்தை குறைக்கப்பட்ட அளவான 136 அடியிலிருந்து 142 அடியாக உடனடியாக உயர்த்திக் கொள்ளலாம் என்று உச்ச நீதிமன்றம் கடந்த 2006ம் ஆண்டு பிப்ரவரி 27ம் தேதியன்று தீர்ப்பு வழங்கியதோடு, இதற்கு கேரள அரசு எத்தகைய இடையூறும் விளைவிக்கக் கூடாது என்றும் உத்தரவிட்டது.

உச்சநீதிமன்ற தீர்ப்பிற்கு நேர்மாறாக, கேரள அரசு சட்டசபையில் சட்டத் திருத்தம் கொண்டு வந்து அந்த சட்டத் திருத்தத்தை 2006ம் ஆண்டு மார்ச் 18ம் தேதி முதல் நடைமுறைக்கு கொண்டு வந்தது. தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நிலையிலும், கேரள அரசின் சட்டதிருத்தத்தை எதிர்த்து எனது தலைமையிலான அரசு 27-03-2006 அன்று உச்ச நீதிமன்றத்தல் வழக்கு தொடர்ந்தது.

ஆனால் அதற்கு பின்னர் வந்த திமுக ஆட்சியில் உச்ச நீதிமன்றம் மூலமாகவோ, பேச்சுவார்த்தை மூலமாகவோ தீர்ப்பை நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுக்கவில்லை. இதன் காரணமாக முல்லை பெரியாறு அணை 136 அடிக்கும் மேலாக நிரம்பி உபரி நீர் இன்றளவிலும் வீணாகக் கடலில் கலந்து கொண்டிருக்கிறது மிகுந்த வேதனை அளிக்கிறது.

இந்த சூழ்நிலையில் முல்லைப் பெரியாறு அணையின் அருகே புதிய அணை கட்டும் பணிகள் தொடங்கும் எனவும், இது தொடர்பாக திட்ட அறிக்கை 6 மாதத்திற்குள் பூர்த்தியாகிவிடும் என்றும் ஏற்கனவே கேரள அரசு தெரிவித்தது.

முல்லை பெரியாற்றில் புதிய அணை கட்டுவோம் என கேரள அரசு அறிவித்ததற்கு கண்டனம் தெரிவித்து, அணை சம்பந்தமாக உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்டுள்ள வழக்குகளை விரைந்து நடத்தவும், தற்போது கேரள அரசு முல்லைப் பெரியாறு அருகே புதிய அணை கட்டுவதற்கான பணிகளை துரிதப்படுத்துகின்ற செயலை தடுக்கும் விதமாகவும், புதிய வழக்கு ஒன்றை உச்ச நீதிமன்றத்தில் திமுக அரசு தொடர உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நான் ஏற்கனவே வலியுறுத்தி இருந்தேன்.

தற்போது முல்லைப் பெரியாற்றில் புதிய அணை கட்டும் பணி திட்டமிட்டபடி தொடங்கும் என கேரள மாநில முதல்வர் மீண்டும் அறிவித்துள்ளார். இதற்கான புதிய அலுவலகம் வருகின்ற 19ம் தேதி தொடங்க இருப்பதாகவும், அதற்கான திட்ட அறிக்கையை தயாரிக்க அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன.

தமிழக தரப்பில் இதை தடுக்க எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் இருந்ததன் விளைவாகத்தான், கேரள மாநில அமைச்சரவை திருவனந்தபுரத்தில் கடந்த 9ம் தேதி கூடி விவாதித்து, முல்லைப் பெரியாற்றில் புதிய அணை கட்டும் பணி தொடங்கும் என்றும், அதன் ஒரு பகுதியாகத்தான் அணையைச் சுற்றியுள்ள பகுதியில் வாழும் மக்களை வேறு இடங்களுக்கு மாற்ற நடவடிக்கை மேற்கொண்டிருப்பதாகவும், கேரள முதலமைச்சர் அறிவித்திருக்கிறார்.

எனவே முல்லைப் பெரியாற்றில் புதிய அணையை கட்ட முயற்சிக்கும் கேரள அரசின் நடவடிக்கையை உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன் என கூறியுள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+