For Daily Alerts
Just In
குருப் பெயர்ச்சி - குரு பகவான் தலங்களில் வழிபாடு
சென்னை: குருப் பெயர்ச்சியையொட்டி தமிழகம் முழுவதும் உள்ள பல்வேறு குரு பகவான் தலங்களில் ஆயிரக்கணக்கான மக்கள் சிறப்பு வழிபாடுகளை செய்து குரு பகவானை வழிபட்டனர்.
ஒவ்வொரு ஆண்டும் ஒரு ராசியிலிருந்து இன்னொரு ராசிக்கு குரு பகவான் இடம் பெயர்வது வழக்கம். அப்படி இடம் மாறி வரும் ராசிதாரர்களுக்கு பல்வேறு பலன்களை குரு பகவான் அளிப்பார் என்பது ஐதீகம்.
இந்த வகையில் இன்று அதிகாலை விருச்சிக ராசியிலிருந்து தனுசு ராசிக்கு குரு பகவான் இடம் பெயர்ந்தார். இதையொட்டி தமிழகத்தில் உள்ள குரு பகவான் ஆலயங்களில் சிறப்பு வழிபாடுகள் நடந்தன.
ஆலங்குடியில் உள்ள பிரசித்தி பெற்ற குரு தலமான ஆபத்சகாயேஸ்வரர் ஆலயத்தில் பல்லாயிரக்கணக்கானோர் கலந்து கொண்டு குரு பகவானை தரிசித்தனர்.
அதேபோல மாநிலம் முழுவதும் உள்ள சிவாலயங்களில் உள்ள குரு பகவான் சன்னிதிகளிலும் சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டன.
Comments
Story first published: Saturday, December 15, 2007, 20:28 [IST]