எஸ்பி விசாரணைக்கு பயந்து ஏட்டு தற்கொலை!
தேனி: தேனியில் எஸ்பி விசாரணைக்கு பயந்து ஏட்டு ஒருவர் தற்கொலை செய்து கொண்டார்.
தேனியை அடுத்துள்ள உத்தமபாளையம் காவல் நிலையத்தில் ஏட்டாக பணியாற்றி வருபவர் சேகர் (47). இவருக்கு திருமணமாகி ஜோதி என்ற மனைவியும், 3 குந்தைகளும் உள்ளனர். இவர் வடக்குபட்டியில் குடும்பத்துடன் தங்கியிருக்கிறார்.
இவர் மீது தொடர்ந்து குற்றச்சாட்டு வந்து கொண்டே இருந்தது. இதனால் எஸ்பி சுதாகர் கடந்த சில நாட்களுக்கு முன்பு இவரை அழைத்து விசாரித்துள்ளார். பல மணி நேர விசாரணைக்கு பிறகு விடுவிக்கப்பட்டுள்ளார். அதற்கு பிறகு வழக்கம் போல் சேகர் பணிக்கு சென்றுள்ளார்.
இந்த நிலையில் சேகரின் இறந்து போன மாமாவிற்கு சுருளியில் சடங்கு செய்ய முடிவு செய்யப்ப்ட்டது. இதற்கு செல்ல மறுத்த ஏட்டு சேகர் வீட்டிலேயே இருந்துவிட்டார். இனால் ஏட்டுவின் மனைவி, குழந்தைகள் ஆகியோர் சுருளிக்கு சென்றனர்.
வீட்டில் தனியாக இருந்த ஏட்டு சேகர் பூச்சி கொல்லி மருந்தை சாப்பிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
தகவலறிந்த போலீசார் சேகரின் உடலை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். பிரேத பரிசேதனை முடிவுக்கு பின் சேகரின் பிரேதத்தை வாங்க அவர் மனைவி மற்றும் உறவினர்கள் மறுத்து விட்டனர்.
ஏட்டு சேகர் சாவுக்கு எஸ்பி சுதாகர் தான் காரணம் என கூறி பிரேதத்தை வாங்க மறுத்ததால் அங்கு பெரும் பரபரப்பு நிலவுகிறது.












Click it and Unblock the Notifications