சென்னையில் போலீஸ் விடிய விடிய ரெளடிகள் வேட்டை

Subscribe to Oneindia Tamil


சென்னை: சென்னையில் நேற்று இரவில் மட்டும் 700க்கும் மேற்பட்ட ரெளடிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கூடுதல் போலீஸ் கமிஷனர் ஜாங்கிட்டின் மேற்பார்வையில் நகர் முழுவதும் போலீசார் சென்னையில் லாட்ஜுகளில் திடீர் சோதனை நடத்தினர். விடிய விடிய வாகன சோதனையும் நடந்தது.

வட சென்னை இணை போலீஸ் கமிஷனர் ரவி தலைமையில் வாகன சோதனை நடந்தது. மேலும் புளியந்தோப்பு, வியாசர்பாடி ஆகிய பகுதிகளில் போலீசார் ரோந்து சென்று பழைய குற்றவாளிகள் 150 பேர், 20 ரெளடிகளைர் கைது செய்தனர்.

மத்திய சென்னையில் இணை போலீஸ் கமிஷனர் பாலசுப்பிரமணியம் தலைமையிலான போலீசார் அண்ணாநகர், திருவல்லிக்கேணி, அம்பத்தூர் பகுதிகளில் போலீசார் வாகன சோதனை நடத்தினர்.

இந்தப் பகுதிகளில் அதிரடி ரெய்டில் இதில் 40 பழைய குற்றவாளிகள், 8 ரெளடிகள் 187 சந்தேக குற்றவாளிகள் என மொத்தம் 253 பேர் கைது செய்யப்பட்டனர்.

அதே போல தென் சென்னையில் இணை கமிஷனர் துரைராஜ் கண்காணிப்பில் துணை போலீஸ் கமிஷனர்கள் மெளரியா, சேசஷாயி, லட்சுமி தலைமையில் 300 ரெளடிகளை போலீசார் கைது செய்தனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+