முஷாரப் செளதி பயணம்: ஷெரீப்புடன் பேச்சு?

Subscribe to Oneindia Tamil


Pervez Musharrafஇஸ்லாமாபாத்: பாகிஸ்தான் அதிபர் பர்வேஸ் முஷாரப் இரண்டு நாள் பயணமாக செளதி சென்றார். அங்கு முன்னாள் பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப்பை முஷாரப் சந்திக்கக் கூடும் என்று தெரிகிறது.

பாகிஸ்தானில் நெருக்கடி நிலையை அமல்படுத்திய பின் முஷாரப் மேற்கொள்ளும் முதல் வெளிநாட்டு பயணம் இது தான் என்பது குறிப்பிடத்தக்கது. செளதி மன்னர் அப்துல்லாவுடன் தனது நாட்டின் அரசியல் நிலைமை குறித்து முஷாரப் ஆலோசிப்பார் என்று தெரிகிறது.

பாகிஸ்தானுக்கு நிதியுதவு செய்யும் முக்கிய நாடு செளதி அரேபியா என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் பாகிஸ்தானுக்கு நெருக்கடியான நேரங்களில் செளதியின் அறிவுரையை அந் நாட்டு ஆட்சியாளர்கள் கேட்பது வழக்கம்.

அந்த வகையில் முஷாரப் செளதிக்கு சென்றுள்ளார். அங்கு அரசியல் தஞ்சம் புகுந்துள்ள ஷெரீப்பையோ அல்லது அவரது ஆலோசகர்களைேயா முஷாரப் சந்திக்கக் கூடும் என்று தெரிகிறது.

தனது அரசுக்கு நாடு முழுவதும் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ள நிலையில் தனது அரசியல் எதிரிகளுடனும் சமாதானமாக போக வேண்டிய நிலைக்கு முஷாரப் தள்ளப்பட்டுள்ளார்.

ஆனால் இந்த சந்திப்பை நவாஸ் ஷெரீப் விரும்பவில்லை என்று கூறப்படுகிறது. அவர் கூறுகையில்,

முஷாரப் என்னை சந்திக்க முயற்சிப்பது தேவையில்லாதது. முஷாரப்பிற்கு கொடுப்பதற்கு என்னிடம் எதுவுமில்லை. அதேபோல் நானும் அவரிடமிருந்து எதையும் எதிர்பார்க்கவில்லை என்று கூறியுள்ளார்.

ஆனால், செளதி நிர்பந்தித்தால் இருவரும் சந்தித்துப் பேச வாய்ப்புள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+