பெண் கற்பழிப்பு: மதபோதகர், மனைவிக்கு போலீஸ் வலை

Subscribe to Oneindia Tamil

உளுந்தூர்பேட்டை: சிகிச்சைக்காக வந்த பெண்ணை வீட்டில் அடைத்து வைத்து கற்பழித்த மத போதகரும், அவரது மனைவியும் தலைமறைவாகிவிட்டனர். அவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டை கந்தசாமிபுரத்தில் வசித்து வருபவர் ரிச்சர்ட் தாஸ். மதபோதகரான இவர் வைத்தியராகவும் உள்ளார். இவரது மனைவி ராணி.

ரிச்சர்ட் தாசிடம் லீலா (18-பெயர் மாற்றப்பட்டுள்ளது) தனது தாய்-தந்தையுடன் சிகிச்சைக்காக வந்துள்ளார். அப்போது 2 மாதம் வரை மல்லிகா என் வீட்டில் தங்கி இருந்தால் தான் வைத்தியம் பார்க்க முடியும் என்று ரிச்சர்ட் கூறினார்.

இதை நம்பி மல்லிகாவை தாஸின் வீட்டில் பெற்றோர் வீட்டு விட்டு சென்றுவிட்டனர். அதன்பிறகு மல்லிகாவை வாரம் ஒரு முறை அவரது தாய் சென்று பார்த்து வந்தார்.

இந் நிலையில் கடந்த 9ம் தேதி மல்லிகாவை பார்க்க தாயார் வந்தார். அங்கு மல்லிகா இல்லை. அவர் வெளியூர் சென்று விட்டதாக ரிச்சர்டின் மனைவி ராணி கூறினார்.

ஆனால், அதே ஊரில் உள்ள அய்யனார் என்பவரது வீட்டில் மல்லிகா தஞ்சம் புகுந்துள்ளதாக அவரது பெற்றோருக்குத் தெரியவந்தது. இதையடுத்து அவரை பெற்றோர் மீட்டனர்.

மல்லிகாவை ரிச்சர்ட் தாஸ் மற்றும் அவருடைய மனைவி அடித்து கொடுமைப்படுத்தியதும், மல்லிகாவுக்கு மயக்க மருந்து கொடுத்து ரிச்சர்ட் கற்பழித்த விவரமும் தெரியவந்தது. இந்த கற்பழிப்புக்கு ராணியும் உடந்தையாக இருந்தாக மல்லிகா கூறியுள்ளார்.

இதுகுறித்து உளுந்தூர்பேட்டை போலீசில் மல்லிகாவின் தாயார் புகார் செய்தார். இதையடுத்து ரிச்சர்ட் மற்றும் அவரது மனைவி தலைமறைவாகிவிட்டனர் அவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

தலைமறைவாக உள்ள ரிச்சர்ட் தாசுக்கு 4 மகன்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. அவர்கள் வெளியூரில் வசித்து வருகின்றனராம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+