நாஞ்சில் சம்பத் விவகாரத்தில் அரசியல் பழிவாங்கல்-வைகோ
சென்னை: அனைத்து அவதூறு வழக்குகளையும் வாபஸ் பெறும்போது நாஞ்சில் சம்பத் மீதான வழக்குகளை மட்டும் வாபஸ் பெற மறுப்பது அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ குற்றம் சாட்டியுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
கடந்த ஆட்சியில் அரசியல் தலைவர்கள், பத்திரிகையாளர்கள் மீது தொடரப்பட்ட அவதூறு வழக்குகளைத் திரும்பப் பெற முடிவு செய்து, 2006ம் ஆண்டு மே 27ம் தேதி தமிழக அரசு ஆணை வெளியிட்டது.
அதன்படி, குற்றவியல் நீதிமன்றங்களில் அரசியல் தலைவர்கள், மேடைப் பேச்சாளர்கள் மீது தாக்கல் செய்யப்பட்ட அவதூறு வழக்குகளைத் திரும்பப் பெற அறிவுறுத்தி, சம்பந்தப்பட்ட குற்றவியல் வழக்கறிஞர்களுக்கு நகல் அனுப்பப்பட்டது.
இந்நிலையில், மதிமுக கொள்கை விளக்க அணிச் செயலாளர் நாஞ்சில் சம்பத் மீது தொடரப்பட்ட 22 அவதூறு வழக்குகளை தடை செய்யக் கோரி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு விசாரணைக்கு உயர் நீதிமன்றம் தடை வழங்கியது.
அந்த வழக்குகளை விரைந்து விசாரிக்க அரசுத் தரப்பில் முயற்சி எடுக்கப்பட்டு, உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது, நாஞ்சில் சம்பத் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்கள், வழக்குகளைத் திரும்பப் பெற அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளதை சுட்டிக்காட்டினர்.
ஆனால் சம்பத் விவகாரத்தில் அரசாணையை நடைமுறைப்படுத்த முடியாது என அரசு வழக்கறிஞர் மறுத்து கடிதம் அனுப்பியுள்ளதாக வாதிட்டார்.
மற்றவர்கள் வழக்குகளையெல்லாம் திரும்பப் பெற சம்மதித்த அரசு வழக்கறிஞர்கள், சம்பத் மீதான வழக்கை திரும்பப் பெற மறுத்திருப்பது வியப்பாக உள்ளது.
முதல்வர் கருணாநிதியின் உத்தரவை அவரால் நியமனம் செய்யப்பட்ட அரசு வழக்கறிஞர்களே ஏற்க மறுத்து நிராகரித்தது என்.
இது முழுக்க முழுக்க அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை என்று கூறியுள்ளார் வைகோ.
-
Gold Investors: தங்கம் விலை தொடர் சரிவு! முதலீட்டாளர்களுக்கு நஷ்டம்? என்ன நடக்கிறது? -
தமிழக சட்டசபையில் உங்கள் குரல் ஒலிக்குமா? நிருபர் கேட்ட கேள்வி! வைகோ சொன்ன ஸ்டன்னிங் பதில்! -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
சென்னை.. தேர்தல் பறக்கும் படையிடம் சிக்கிய "ஏகே 47.." விசாரணையில், யாரும் எதிர்பார்க்காத ட்விஸ்ட் -
'மிஷன் இம்பாசிபிள்.. மெரினா டூ மடிப்பாக்கம்... பறக்கும் சென்னை.. தரம் தெரியாமல் மாறப்போகிறது! -
சென்னை தங்க பஸ்சில் நடந்த சம்பவம்.. கொஞ்சம் பொறுப்போட நடங்க! பயணிகளுக்கு நெட்டிசன்கள் அட்வைஸ் -
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
தங்கம் வைத்திருப்போருக்கு பெரிய மாற்றம்! ஏப் 1 முதல் 6 டிஜிட் HUID கட்டாயம்! உங்க பழைய நகை என்னாகும் -
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி












Click it and Unblock the Notifications