பெண்ணுக்கு கட்டாய திருமணம்: தம்பதி-மகன் கைது
பழனி: பழனி அருகே மைனர் பெண்ணைக் கடத்திச் சென்று மகனுக்கு கட்டாயத் திருமணம் செய்து வைத்த தந்தை, தாய் மற்றும் திருமணம் செய்த வாலிபர் ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.
திண்டுக்கல் மாவட்டம் பழனி அடிவாரம் பகுதியை சேர்ந்தவர் நாகரத்தினத்தின் மகள் ராஜேஸ்வரி(16).
ராஜேஸ்வரியை நேற்று முன்தினம் தாராபுரத்தை சேர்ந்த பாண்டியன், அவருடைய மனைவி ஜீவா மற்றும் அவரது மகன் சரவணன் ஆகியோர் காரில் கடத்தி சென்றனர்.
பின்னர் சரவணனுக்கும், ராஜேஸ்வரிக்கும் கட்டாய திருமணம் செய்து வைத்துள்ளனர். அதன்பிறகு அவர்களிடமிருந்து தப்பி வந்த ராஜேஸ்வரி பழனி வந்து நடந்ததை தனது குடும்பத்தாரிடம் சொல்லியுள்ளார்.
தன் மகளுக்கு கட்டாய திருமணம் செய்து வைத்தது குறித்து ராஜேஸ்வரியின் தந்தை மகளுடன் சென்று காவல் நிலையத்தில் புகார் செய்தார்.
இதையடுத்து பாண்டியன், மனைவி ஜீவா, மகன் சரவணன் ஆகியோரை கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.