For Daily Alerts
Just In
படிகட்டே இல்லாத அரசுப் பேருந்து..
ராமேஸ்வரம்: ராமேஸ்வரத்தில் பாம்பனில் இருந்து இயக்கப்படும் ஒரு அரசுப் பேருந்தில் படிக்கட்டே இல்லை.
படியில் பயணம், நொடியில் மரணம் என்று அரசுப் பேருந்துகளில் எழுதும் எதுகை-மோனை வசனங்களுக்கு பஞ்சமில்லை.
ஆனால், இந்த பஸ்சில் பின்பக்க படிக்கட்டே உடைந்து விழுந்துவிட்ட நிலையில் முன் பக்க வாசல் வழியாகவே பயணிகள் ஏறி, இறங்க வேண்டிய அவலத்தில் உள்ளனர்.
பாம்பன்-வேர்க்கோடு இடையே ரொம்ப காலமாக ஓடும் இந்த டப்பா பேருந்தை மாற்ற வேண்டும், அட்லீஸ்ட் படிகட்டையாவது மாட்ட வேண்டும் என கோருகின்றனர் இப் பகுதியினர்.
Comments
Story first published: Saturday, December 15, 2007, 20:14 [IST]