Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

அரசு மருத்துவமனையில் பெண்ணுக்கு அரிவாள் வெட்டு

Subscribe to Oneindia Tamil


கோவில்பட்டி: கோவில்பட்டி அரசு மருத்துவமனை வளாகத்தில் பெண்னை அரிவாளால் வெட்டிய மற்றொரு பெண் கைது செய்யப்பட்டார்.

கோவில்பட்டி அருகே கூசாலிபட்டியை சேர்ந்த கண்ணன் மனைவி அமராவதி. இவரும் வடக்கு முத்துலாபுரத்தை சேர்ந்த ஆறுமுகம் மகள் கண்ணம்மாள் என்பவரும் கூசாலிப்பட்டியில் உள்ள தீப்பெட்டி தொழிற்சாலையில் ஒன்றாக வேலை பார்த்து வருகின்றனர்.

கண்ணாம்மாளின் தங்கை பழனிக்கு அரசு மருத்துமனையில் குழந்தை பிறந்தது. அதைப் பார்க்க கண்ணம்மாள் மருத்துவமனைக்கு வந்தார். அப்போது அங்கு வந்த அமராவதி கையில் மறைந்து வைத்திருந்த அரிவாளால் கண்ணம்மாளின் பின்னந் தலையிலும் இடது காலிலும் வெட்டினார். இதில் கண்ணம்மாள் பலத்த காயம் அடைந்தார்.

தகவல் கிடைத்ததும் கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய போலீசார் அமராவதியை கைது செய்து விசாரணை செய்தனர். விசாரணையில் அமராவதியின் கணவர் கண்ணனிடம், அமராவதிக்கு வேறு ஒரு ஆணுடன் தொடர்பு இருப்பதாக கண்ணம்மாள் கூறினாராம்.

இதனால் கண்ணன் சந்தேமடைந்து அமராவதியை அடித்து சித்ரவதை செய்தாராம். இதனால் கோபமடைந்த அமராவதி கண்ணம்மாளை வெட்டியதாக தெரிய வந்தது.

காயமடைந்த கண்ணம்மாள் அரசு மருத்துமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+