மத்திய சிறைகளில் அதிரடி சோதனை: கைதிகளிடம் செல்போன்கள் பறிமுதல்
Subscribe to Oneindia Tamil
நெல்லை: தமிழகத்திலுள்ள மத்திய சிறைகளில் ஒரே நாளில் சிறை அதிகாரிகள் நடத்திய சோதனையில் கைதிகளிடமிருந்து 15 செல்போன்கள் கைப்பற்றப்பட்டன.
தமிழக சிறைகளில் கைதிகள் செல்போன்களை பயன்படுத்தி வருவது ஊரறிந்த விஷயம். இதற்கு உதவியாக இருப்பது ரூ.50 கொடுத்தால் எதையும் செய்ய தயாராக இருக்கும் காக்கிகள் தான்.

இந் நிலையில் தமிழகத்தில் உள்ள 9 மத்திய சிறைகளில் அதிரடி சோதனை நடத்தப்பட்டது.
பாளையங்கோட்டை மத்திய சிறையில் சோதனையின்போது ஆயுள் தண்டனை கைதி வெள்ளப்பாண்டியனிடம் இருந்து ஒரு செல்போன் பறிமுதல் செய்யப்பட்டது. அங்கிருந்த மற்ற இரண்டு கைதிகள் தாங்களாக முன் வந்து 2 செல்போன்களை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.
நேற்று ஒரு நாள் நடந்த அதிரடி சோதனையில் தமிழகம் முழுவதும் உள்ள மத்திய சிறைகளிலிருந்து 15 செல்போன்கள் கைதிகளிடமிருந்து கைப்பற்றப்பட்டுள்ளன.












Click it and Unblock the Notifications