மனைவி சித்திரவதை: கள்ளக் காதலியுடன் கணவர் கைது
கரூர்: மனைவியை வரதட்சணை கேட்டு சித்திரவதை செய்த இளைஞர், அவரது தாயார், சகோதரி மற்றும் கள்ளக் காதலியை போலீஸார் கைது செய்துள்ளனர்.
கரூர் அண்ணாநகரைச் சேர்ந்தவர் ஆதிரைச் செல்வன் (27). இவரது மனைவி மலர்விழி. ஆதிரைச் செல்வனுக்கும் சரஸ்வதி என்ற பெண்ணுக்கும் கள்ளத் தொடர்பு ஏற்பட்டது.
இதையடுத்து மனைவியைப் புறக்கணிக்க ஆரம்பித்தார். மேலும், கூடுதல் வரதட்சணை கேட்டும் மலர்விழியைக் கொடுமைப்படுத்தி, சித்திரவதை செய்து வந்தார்.
ஆதிரைச் செல்வனின் செயலுக்கு அவரது தாயார் சிந்தாமணி, தங்கை மீராதேவி ஆகியோரும் உடந்தையாக இருந்தனர்.
வரதட்சணைக் கொடுமையாலும், கணவர் கள்ளக் காதலியுடன் கொட்டம் அடித்து வந்ததையும் தாங்கிக் கொள்ள முடியாத சரஸ்வதி, கரூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார்.
இதையடுத்து நடவடிக்கையில் இறங்கிய போலீஸார், ஆதிரைச் செல்வன், சிந்தாமணி, மீராதேவி, சரஸ்வதி ஆகிய நான்கு பேரையும் கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட நால்வரும் நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.