கூடுதல் விலைக்கு மது விற்ற டாஸ்மாக் கடைகளுக்கு சீல்
ஆறுமுகநேரி: ஆறுமுகநேரியில் கூடுதல் விலைக்கு மதுபானங்களை விற்ற டாஸ்மாக் மதுபானக் கடைகளுக்கு பறக்கும் படை அதிகாரிகள் திடீரென சோதனை நடத்தி சீல் வைத்தனர்.
ஆறுமுகநேரி பகுதியில் உள்ள டாஸ்மாக் மதுபானக்கடைகளில் நடக்கும் பல்வேறு முறைகேடுகள் நடப்பதாக உயரதிகாரிகளுக்கு தொடர்ந்து புகார்கள் வந்தன. இதனைத் தொடர்ந்து ஆறுமுகநேரி மெயின் பஜாரில் உள்ள 3 டாஸ்மாக் மதுக்கடைகளில் பறக்கும் படை அதிகாரிகள் திடீரென்று சோதனை நடத்தினர்.
அப்போது கடைகளில் உள்ள பார்களில் கட்டிங் மற்றும் கூடுதல் விலைக்கு பீர் விற்பனை செய்வதை அதிகாரிகள் கண்டுபிடித்தனர். உடனடியாக அந்த 3 கடைகளையும் அதிகாரிகள் சீல் வைத்தனர்.
சீல் வைக்கப்பட்ட கடைகளில் தூத்துக்குடி மாவட்ட டாஸ்மாக் மேலாளர் தலைமையில் அதிகாரிகள் நேற்று பிற்பகல் 12 மணி முதல் மாலை வரை சோதனை நடத்தினர். இந்த சோதனையில் 3 மதுபான கடைகளிலும் இருப்பு பணத்தில் பற்றாக்குறை, போலி மதுவகை சரக்குகள் இருப்பதை கண்டு பிடித்தனர்.
இரவுக்குள் இருப்பு பணம், கணக்கு பதிவேடு மற்றும் சரக்கு கையிருப்பு முறையாக இல்லாவிட்டால் கடை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என டாஸ்மாக் மேலாளர் எச்சரிக்கை விடுத்தார்.












Click it and Unblock the Notifications