பள்ளிவாசல் விவகாரம்: கடையநல்லூரில் மீண்டும் பதற்றம், போலீஸ் குவிப்பு
கடையநல்லூர்: கடையநல்லூர் பள்ளிவாசலில் தொழுகை நடத்துவது குறித்து இரு தரப்பினருக்கிடையே மீண்டும் பிரச்சனை எழுந்துள்ளதால் அசம்பாவிதம் நடக்காமல் தடுக்க போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
திருநெல்வேலி மாவட்டம், கடையநல்லூரில் முபாரக் பள்ளிவாசல் உள்ளது. கடந்த 1994ம் ஆண்டு துவக்கப்பட்ட இந்த பள்ளிவாசலின் தலைவராக ஷேக் உதுமானும், செயலாளராக அப்துல் ஜாலீல் உள்பட பலர் நிர்வாக குழு உறுப்பினர்களாக செயல்பட்டு வந்தனர்.
அப்துல் ஜாலீல் மறைவுக்கு பிறகு பள்ளி வாசலை நிர்வகிப்பதில் பிரச்சனை ஏற்பட்டது. பள்ளிவாசல் தங்களது கட்டுப்பாட்டில் தான் இருக்க வேண்டும் என ஜாக் மற்றும் தவ்ஹீத் ஜாமத் அமைப்பினர் உரிமை கொண்டாடினர்.
இந்த பிரச்சனை நீதிமன்றத்திற்கு சென்றது. தென்காசி உரிமையியல் நீதிமன்றத்தில் ஜாக் அமைப்பினருக்கு சாதகமாக தீர்ப்பு வந்தது. இதை தொடர்ந்து ஜாக் அமைப்பினர் பள்ளிவாசலில் தொழுகை நடத்தி வந்தனர்.
இந் நிலையில் தவ்ஹீத் ஜாமத்தை சேர்ந்தவர்களும் இதே பள்ளிவாசலில் தொழுகை நடத்த முயன்றதால் மீண்டும் பிரச்சனை ஏற்பட்டது. ஒவ்வொரு வெள்ளிக்கிழமை தொழுகையின் போதும் அங்கு பதட்டம் ஏற்படவே பள்ளிவாசல் முன்பு நிரந்தர போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது.
இதற்கிடையே தவ்ஹீத் ஜமாத் அமைப்பினர் முபராக் பள்ளிவாசல் நிர்வாக குழு சார்பாக தென்காசி அமர்வு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இதில் இவர்களுக்கு சாதகமாக தீர்ப்பு வந்தது. இதையடுத்து அந்த அமைப்பினர் பள்ளிவாசல் பூட்டுகளை உடைத்து உள்ளே புகுந்து தொழுகை நடத்தினர்.
இது குறித்து ஜாக் அமைப்பை சேர்ந்த முகமது சிராஜீதின் கடையநல்லூர் போலீசில் புகார் செய்தார். போலீசார் பள்ளி வாசல் பூட்டுகளை உடைத்து உள்ளே நுழைந்த தமிழ்நாடு தவ்ஜீத் ஜாமத் மாநில துணைத் தலைவர் சைபுல்லா காஜா, பள்ளிவாசல் தலைவர் ஷேகனா மற்றும் நிர்வாகிகள் ரஹ்மத்துல்லா, ஷேக் உதுமான், களந்தல் இப்ராகிம் ஆகிய 5 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
இந்நிலையில் ஜாக் அமைப்பினர் தென்காசி அமர்வு நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக மதுரை உயர்நீதிமன்றத்தில் இடைக்கால தடை ஆணை பெற்றனர். இதனை தொடர்ந்து ஜாக் அமைப்பினர் முபராக் பள்ளிவாசலில் நுழைந்து அவர்கள் தொழுகை நடத்த முயன்றதால் பதட்டம் ஏற்பட்டது. இதனால் அங்கு போலீசார் குவிக்கப்பட்டனர்.
தென்காசி டி.எஸ்.பி மயில்வாகனன் கடையநல்லூர் விரைந்து இரு தரப்பினரையும் அழைத்து சமாதான பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்கள்.
-
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
ஆரம்பமே அலங்கோலம்.. பெரம்பூர் விஜய் பிரச்சாரத்தில் தவெகவினரால் அடுத்தடுத்து அசம்பாவிதம் -
Gold Price Today: தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது.. காலையில் சரிந்து மாலையில் எகிறியது! நகை பிரியர்கள் கலக்கம்! -
ஆரணியில் கால் வைத்த மகாலட்சுமி.. 75 வருட ரூல்ஸை உடைத்து திமுக முதல்முறை சாதனை.. அதிரும் திருவண்ணாமலை! -
தவெக விஜய்க்கு சான்ஸே இல்லை.. 3வது இடம்தான்.. ஆனால் அதிலும் பெரிய சறுக்கல்.. சுடசுட வெளியான சர்வே -
தமிழகத்தில் 2010 ல் RI ஆக வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் எவ்வளவு சம்பளம் வாங்குவார் தெரியுமா? -
மாதம்பட்டி ரங்கராஜன் டிஎன்ஏ டெஸ்ட் ரிசல்ட் வந்தாச்சு..! ஜாய் கிரிஸில்டா குழந்தை விஷயத்தில் வெளியான தகவல்! -
நான் ஒருமுறை குடிச்சேன்.. ஐஏஎஸ் ஆக வேண்டிய பொண்ணு! வாழ்க்கை மாறிய காரணம்! நடிகை கஸ்தூரி ஓபன் -
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2: மீனா கேட்ட கேள்வி.. பாண்டியனின் எதிர்பாராத முடிவு.. சரவணன் நிலைமை? செம சம்பவம் -
இததான் ஒட்டிகிட்டு இருந்தீங்களா? அமெரிக்காவை லெஃப்ட் ஹேண்ட் டீல் செய்யும் ஈரான்! கோடிக்கணக்கில் லாஸ் -
விஜய்க்கு பெரம்பூரில் பிரபல நடிகை வைத்த செக்.. பிரச்சாரம் தொடங்கும் முன்பே இப்படியா பஞ்சாயத்து? -
நேத்து வந்த ஸ்ரீநாத்துக்கு சீட்.. தூத்துக்குடி அஜிதா ஆக்னல் செய்த சம்பவம்! சொதப்பிய விஜய்!












Click it and Unblock the Notifications