For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஆண்டிப்பட்டியில் தொடர் மின்தடையால் நெசவாளர்கள் அவதி

By Staff
Google Oneindia Tamil News


ஆண்டிப்பட்டி: ஆண்டிப்பட்டி பகுதியில் தொடர்ந்து மின்தடை ஏற்பட்டு வருவதால் நெசவாளர்கள் கடும் அவதிக்குள்ளாகியுள்னர்.

ஆண்டிப்பட்டியில் 2,000க்கும் மேற்பட்ட விசைத்தறி கூடங்கள் உள்ளன. இங்கு சேலைகள், காட்டன் சேலைகள் மற்றும் டவல்கள் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது.

கடந்த சில நாட்களாக காலை, மாலை, இரவு என நேரம் காலம் இல்லாமல் அடிக்கடி மின்தடை ஏற்படுகிறது. இதனால் தினமும் பல மணி நேரம் வரை மின் தடை ஏற்படுவதால் கூலி ஆட்கள் வைத்து தறி ஒட்டுபவர்கள் கடும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர்.

முன்னறிவிப்பு இல்லாமல் மின்தடை அடிக்கடி ஏற்படுவதால் வேலை செய்யாமலே கூலி ஆட்களுக்கு சம்பளம் கொடுக்க வேண்டி இருப்பதாக தறி ஓட்டுபவர்கள் புலம்புகின்றனர்.

சிறு தொழில்கள் நிறைந்த பகுதியான ஆண்டிப்பட்டி மின் தடையால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதால் இதற்கு மாவட்ட ஆட்சித் தலைவர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொது மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X