For Daily Alerts
Just In
தைவானில் இரண்டு முறை நிலநடுக்கம்
தைவான்: தைவான் நாட்டில் அடுத்தடுத்து இன்று அதிகாலையில் இரண்டு முறை நிலநடுக்கம் ஏற்பட்டது.
தைவான் நாட்டின் கிழக்குப் பகுதியில் உள்ள இவான் நகரத்தில் இன்று அதிகாலை 5 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கத்தால் அப்பகுதியில் உள்ள கட்டடங்கள் பயங்கரமாக ஆடின.
இதனால் மக்கள் வீட்டைவிட்டு அலறியடித்துக் கொண்டு வீதிகளில் ஓடினார்கள். இந்த நிலநடுக்கம் ஏற்பட்ட அடுத்த ஒரு மணி நேரத்திலேயே மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டது.
அடுத்தடுத்து நிகழ்ந்த நிலநடுக்கத்தின் அளவு ரிக்டர் அளவு கோலில் 5.5 மற்றும் 4.6 ஆக பதிவாகியுள்ளது.
இரு முறை ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தால் இவான் நகர மக்கள் பெரும் பீதிக்கு ஆளாகியுள்ளார்கள்.
Comments
Story first published: Saturday, December 15, 2007, 17:43 [IST]