விரைவில் ஓடும் ரயில்களில் ஏ.டி.எம். வசதி - வேலு

Subscribe to Oneindia Tamil

சென்னை: ரயில்களில் ஏ.டி.எம் வசதியை ஏற்படுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. விரைவில் இது அமலுக்கு வரும் என்று மத்திய ரயில்வே இணை அமைச்சர் ஆர்.வேலு கூறியுள்ளார்.

சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் இ- டிக்கெட் வசதிக்கான ஏ.டி.எம். கருவியை வேலு இன்று தொடங்கி வைத்தார். பின்னர் அவர் கூறுகையில், இதுபோன்ற ஏடிஎம் சாதனங்கள் அனைத்து ரயில் நிலையங்களிலும் பொருத்தப்படும்.

அடுத்து, ஓடும் ரயில்களிலும் ஏடிஎம் வசதி செய்யப்படும். அதற்கு முன்பாக பாதுகாப்பு சம்பந்தப்பட்ட விஷயங்கள் குறித்து கவனம் செலுத்த வேண்டியுள்ளது. இருப்பினும் விரைவில் இது அமலுக்கு வரும்.

ரயில் நிலையங்களில் இ டிக்கெட் ஏடிஎம் வசதியை ஏற்படுத்துவது தொடர்பாக 7 தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளுடன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.

வங்கிகள் தங்களது ஏடிஎம் அறைகளை நிர்மாணிக்க ரயில் நிலையங்களில் இடம் வழங்கப்படும். இந்த மையத்தில் இண்டர்நெட் இணைப்புடன் கூடிய ஒரு கம்ப்யூட்டர் டிக்கெட் சாதனம் வைக்கப்பட்டிருக்கும். நாடு முழுவதும் மொத்தம் 1392 இ டிக்கெட் ஏடிஎம் மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன என்றார் அவர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+