கருணாநிதியுடன் ஹிண்ட்ராப் தலைவர் சந்திப்பு
சென்னை: முதல்வர் கருணாநிதியை, இன்று மலேசிய தமிழர் உரிமைப் போராட்டக் குழுவின் தலைவர் வாய்த மூர்த்தி சந்தித்து தமிழர் பிரச்சினை குறித்து விவாதித்தார்.
மலேசியாவில் மலாய் இன மக்களுக்கு சமமாக தாங்களும் நடத்தப்பட வேண்டும் என்று மலேசிய தமிழர்கள் போர்க்கொடி உயர்த்தியுள்ளனர். இதுதொடர்பான போராட்டத்தை ஒடுக்கி வருகிறது மலேசிய அரசு.
இந்து உரிமை நடவடிக்கைக் குழு (ஹிண்ட்ராப்) என்ற போராட்டக் குழு ஆரம்பிக்கப்பட்டு இக்குழுவினர் தீவிரப் போராட்டத்தில் குதித்துள்ளனர்.
இந்த நிலையில் இன்று ஹிண்ட்ராப் தலைவர் வாய்தமூர்த்தி சென்னை வந்தார். கோபாலபுரத்தில் உள்ள முதல்வர் கருணாநிதியை அவர் சந்தித்தார். இந்த சந்திப்பின்போது, மலேசிய தமிழர்கள் பிரச்சினை குறித்து முதல்வரிடம் வாய்த மூர்த்தி விளக்கிக் கூறினார். தமிழர்களின் போராட்டத்திற்கு ஆதரவு தர வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய வாய்த மூர்த்தி, தமிழர்களின் பிரச்சினைகள், பட்டு வரும் இன்னல்கள் குறித்து முதல்வரிடம் தெளிவாக விளக்கினேன். எங்களது உணர்வுகளை அவர் புரிந்து கொண்டார். மலேசியத் தமிழர்களுக்கு தனது ஆதரவு எப்போதும் உண்டு என்று உறுதியளித்தார் என்றார்.












Click it and Unblock the Notifications