வயதான பெற்றோரை கவனிக்காமல் கைவிட்டால் சிறை
டெல்லி: வயது முதிர்ந்த பெற்றோரைக் கைவிடும் பிள்ளைகளைத் தண்டிக்கும் வகையிலான சட்ட மசோதாவுக்கு நாடாளுமன்றம் ஒப்புதல் வழங்கியது. இதன் மூலம் வயதான காலத்தில் பெற்றோரைக் கைவிடும் பிள்ளைகளுக்கு 3 மாத சிறைத் தண்டனை அல்லது அபராதம் அல்லது இரண்டும் சேர்த்து விதிக்கப்படும்.
வயது முதிர்ந்தவர்கள் கடைசிக்காலத்தில் நிராதரவாக விடப்படும் அவல நிலையை களையும் வகையில், மத்திய அரசு பெற்றோர் மற்றும் மூத்த குடிமக்கள் பராமரிப்புச் சட்டத்தைக் கொண்டு வந்துள்ளது. இந்த சட்ட மசோதா நேற்று நாடாளுமன்ற ராஜ்யசபாவில் நிறைவேற்றப்பட்டது.
மசோதாவை தாக்கல் செய்து பேசிய மத்திய சமூக நலம் மற்றும் அமலாக்கத் துறை அமைச்சர் மீரா குமார் பேசுகையில், வயது முதிர்ந்த பெற்றோரை புறக்கணித்து வீடுகளில் வைத்துப் பராமரிக்காமல் இருக்கும் பிள்ளைகளுக்கு இந்த சட்டத்தின் கீழ் அபராதம் விதிக்கப்படும். இதுதவிர 3 மாத சிறைத் தண்டனையும் கிடைக்கும். அல்லது இரண்டு தண்டனைகளும் ஒரே நேரத்தில் விதிக்கப்படும்.
இந்த தண்டனையை எதிர்த்து அப்பீல் செய்ய முடியாது என்பது இந்த சட்டத்தின் சிறப்பம்சமாகும்.
பிள்ளைகள், தங்களது வயது முதிர்ந்த பெற்றோரை அன்போடு அரவணைத்துக் காக்க வேண்டும் என்பதற்காகவே இந்த சட்டம் கொண்டு வரப்படுகிறது.
இந்த சட்டத்தின் கீழ் மாவட்டந்தோறும் ஒரு தீர்ப்பாயம் அமைக்கப்படும். வயது முதிர்ந்தவர்கள் தங்களைப் பராமரிக்காத பிள்ளைகள் குறித்து இங்கு புகார் அளிக்கலாம்.
இதுதவிர மாவட்டந்தோறும் முதியோர் இல்லங்களும் திறக்கப்படும். ஆனால் இது குழந்ைதகளற்ற முதிய தம்பதிகள், வறுமையில் வாடும் முதியோர்களுக்கானது.
குடும்ப உறவுகள் தற்போது சிதறி வருகின்றன. மூத்தவர்களை வீட்டில் வைத்துக் கொள்வது, மதிப்பது, பராமரிப்பது போன்றவை குறைந்து வருகிறது. இந்தியாவின் முக்கிய சிறப்பம்சமே மூத்தவர்களை மதிப்பதும், கூட்டுக் குடும்ப வாழ்வும்தான். அதைக் காக்கும் வகையிலேயே இந்த சட்டம் கொண்டு வரப்படுகிறது என்றார் மீரா குமார்.
ஏற்கனவே இந்த மசோதா லோக்சபாவில் நிறைவேற்றப்பட்டு விட்டது. இதையடுத்து இந்த சட்ட மசோதா அடுத்து குடியரசுத் தலைவரின் ஒப்புதலைப் பெற அனுப்பி வைக்கப்படும்.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications