ஜெயிலரின் தலையை துண்டித்து விடுவோம்: டிஐஜி எஸ்ராவிடம் மிரட்டல் விடுத்த கைதிகள்
சேலம்: சேலம் மத்திய சிறையில் சோதனை செய்ய வந்த சிறைத்துறை டிஐஜி எஸ்ராவிடம், ஜெயிலரின் தலையை துண்டித்து விடுவோம் என்று கைதிகள் மிரட்டியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் அனைத்து மத்திய சிறைகளிலும் கைதிகளிடம் செல்போன், கஞ்சா உட்பட சட்டவிரோதமான பொருட்கள் இருப்பதாக வந்த தகவலையடுத்து எல்லா மத்திய சிறைகளிலும் சோதனை நடந்து வருகிறது.
அதன்பேரில் சேலம் மத்திய சிறையில் சிறைத்துறை கோவை சரக டிஐஜி எஸ்ரா தலைமையில் அதிகாரிகள் சோதனை நடத்த வந்தனர். தென்காசியில் நடந்த தொடர் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட 6 முஸ்லிம்கள் இங்கு அடைக்கப்பட்டுள்ளனர்.
அவர்கள் அடைக்கப்பட்டுள்ள இடத்திற்கு சென்று டிஐஜி எஸ்ரா சோதனை நடத்தினார். அப்போது அந்த கைதிகள் அவரிடம், தங்களை பாளையங்கோட்டை அல்லது மதுரை சிறைக்கு மாற்ற வேண்டும் என்று கோரிக்கை வைத்தோமே. ஏன் இன்னும் மாற்றவில்லை. எங்களுடன் சிறையில் அடைக்கப்பட்டுள்ள அஸ்கர் உடல்நலம் பாதிக்கப்பட்ட போது, மருத்துவமனைக்கு கொண்டு செல்லும்படி கூறியும், சிறை அதிகாரிகள் மறுத்து விட்டனர்.
இந்த சிறையில் உள்ள ஜெயிலர் கருப்பண்ணன் எங்களுக்கு எதிராக செயல்பட்டு வருகிறார். எனவே அவருடைய தலையை நாங்கள் துண்டிப்போம். எங்களுக்கு எல்லா சிறையிலும் ஆட்கள் இருக்கிறார்கள் என்று மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.
கைதிகளின் மிரட்டலை கேட்ட சிறைத்துறை டிஐஜி எஸ்ரா அதிர்ச்சியடைந்தார். பின்னர் கைதிகளை சமாதானம் செய்தார். உங்களை வேறு சிறைக்கு மாற்றுவது எங்களால் முடியாது. அது தொடர்பாக நீதிமன்றத்தில் உத்தரவு பெற வேண்டும் என்று கூறியுள்ளார்.
கைதிகள் மிரட்டல் குறித்து சிறைத்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது,
மிரட்டல் குறித்து சிறைத்துறை உயரதிகாரிகளின் கவனத்துக்கு கொண்டு சென்றுள்ளோம். மேலும் மிரட்டல் விடுத்த கைதிகள் மீது சிறை விதிகளின் படி நடவடிக்கை எடுக்கவும் அரசுக்கு பரிந்துரைகள் செய்யப்பட்டுள்ளது என்றார்.
-
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
மூட்டை மூட்டையாக போய் தங்கத்தை அடகு வைக்கும் மக்கள்.. வெளியான ஷாக் தகவல்.. இப்படி ஒரு காரணமா? -
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
தமிழ் புத்தாண்டு ராசி பலன்: அஷ்டமசனியில் அதிர்ஷ்டத்தை அள்ளும் சிம்ம ராசி.. காதலில் வெற்றி கன்ஃபார்ம் -
சென்னையில் ரூ.36 கோடி கோடிக்கு வீடு வாங்கிய நகை கடைக்காரர்.. அதுவும் இந்த ஏரியாவில்..!! -
33 கேள்விகளுடன் ஒவ்வொரு வீட்டிற்கும்.. நேரடியாகவே வரும் அதிகாரிகள்.. நாம் என்ன செய்ய வேண்டும்? -
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா -
எதிர்நீச்சல் சீரியல் ராணா யார் தெரியுமா? இத்தனை படங்களில் நடித்திருக்கிறாரா? இனி தான் சம்பவமே இருக்கு -
சென்னை சென்ட்ரல் -கோவை வந்தே பாரத்... தங்க முட்டை போடும் வாத்து.. ஒப்புக்கொண்ட ரயில்வே? -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை -
வருமான வரி படிவம் வெளியீடு.. மாத சம்பளம் வாங்குவோர், சிறு வணிகர்கள்.. அறிய வேண்டியவை












Click it and Unblock the Notifications