கற்றறிந்த சமுதாயத்தை உருவாக்க மாணவர்களுக்கு நல்லகண்ணு அழைப்பு
திருச்சி: கற்றறிந்தவர்கள் நிறைந்த புதிய சமுதாயத்தை உருவாக்க மாணவர்கள் கடுமையாக உழைக்க வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொலிட்பீரோ உறுப்பினர் நல்லகண்ணு அழைப்பு விடுத்துள்ளார்.
திருச்சியில், அகில இந்திய கத்தோலிக்க பல்கலைக்கழக சம்மேளனம் சார்பில் அம்பேத்காரியம் என்ற 3 நாள் கலாச்சார விழா நடந்தது. இதன் இறுதி நாள் விழாவில் கலந்து கொண்டு நல்லகண்ணு பேசினார்.
அவர் பேசுகையில், இந்திய அரசியல் சட்ட சிற்பி அம்பேத்கர் குறித்தும், அவரது மாபெரும் சேவை குறித்தும், தீண்டாமைக்கு எதிராக அவர் நடத்திய போராட்டங்கள் குறித்தும் மாணவர்கள் கண்டிப்பாக அறிந்து கொள்ள வேண்டும்.
அம்பேத்கரின் சிந்தனைகளும், சித்தாந்தங்களும் இன்றைக்கும் பொருத்தமாக உள்ளன. காரணம், இன்றைக்கும் ஜாதிப் பிரச்சினைகள் தீரவில்லை. ஜாதீய கொடுமைகளுக்கு எதிராக தீவிரமாக போராடியவர் அம்பேத்கர்.
நலிவடைந்த சமுதாயத்தினரின் நலன்களையும், உரிமைகளையும் காப்பது அவசியமாகும் என்றார் நல்லகண்ணு.












Click it and Unblock the Notifications