85 வயது பாட்டியின் கண் தானம்!
தர்மபுரி: தர்மபுரியில் 85 வயது மூதாட்டி கண் தானம் செய்த சம்பவம் அங்கு பலரையும் ஆச்சர்யப்பட வைத்துள்ளது.
தர்மபுரி மாவட்டம் அருகே உள்ளது பாலக்கோடு. இங்குள்ள வைசியர் தெருவில் வசிப்பவர் நாகரத்தினம்மாள். 85 வயது மூதாட்டி.
இவருக்கு சிறு வயது முதலே சமூகத்தின் மீது தீராத பற்று உண்டு. ஏழை எளிய மக்களுக்கு ஏதாவது உதவி செய்து கொண்டே இருப்பாராம். இவரது கருணை பொதிந்த மனதை கண்டு அந்த ஊர் மக்களே ஆச்சரியப்படுவார்களாம்.
85 வயது ஆன நிலையில் நேற்று அவருக்கு உடல் நலக் கோளாறு ஏற்பட்டுள்ளது. அதில் அவர் இறந்து போனார்.
இறப்பதற்கு முன்பு, தனது கண்களை தானம் செய்வதாகவும், அவற்றை வசதியற்ற ஏழை, எளியவர்களுக்குப் பொருத்த வேண்டும் என்று கூறியிருந்தார் நாகரத்தினம்மாள். அதன்படி அவரது கண்களை டாக்டர்கள் மூலம் அகற்றி கண் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர்.
நாகரத்தினம்மாளின் இந்த தயாள குணம் தர்மபுரி மாவட்ட மக்களிடையே பெரும் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications