தமிழர்களை சட்டப்படி நடத்த வேண்டும்: மலேசியாவுக்கு யு.எஸ்.அறிவுரை
வாஷிங்டன்: மலேசிய போலீஸாரால் கைது செய்யப்பட்டுள்ள தமிழர் தலைவர்களை மலேசிய அரசு சட்டப்படியும், அவர்களது உரிமைகள் கெடாதபடியும் நடத்த வேண்டும் என அமெரிக்கா கூறியுள்ளது.
மலேசியாவில் சம உரிமை கோரி போராட்டம் நடத்தி வரும் தமிழர்கள் மீது மலேசிய அரசு எடுத்து வரும் அடக்குமுறை நடவடிக்கைகளை சமீபத்தில் அமெரிக்கா கண்டித்திருந்தது. மனித உரிமைகள் மீறப்படுவது கவலை தருவதாக அது கூறியிருந்தது.
இந்த நிலையில் ஹிண்ட்ராப் அமைப்பின் சட்ட ஆலோசகர் உதயக்குமார் உள்ளிட்ட 5 தமிழ் தலைவர்கள் உள்நாட்டு பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதுகுறித்து அமெரிக்கா மீண்டும் கவலை தெரிவித்துள்ளது. இதுகுறித்து அமெரிக்க வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் சீன் மெக்கார்மாக் கூறுகையில், கைது செய்யப்பட்டவர்களை, மலேசிய அரசு அந்நாட்டுச் சட்டப்படி நடத்த வேண்டும். அவர்களுக்குரிய உரிமைகள் பாதிக்கப்படக் கூடாது என்று அமெரிக்கா விரும்புகிறது.
விசாரணையை விரைவாகவும், வெளிப்படையாகவும் மலேசிய அரசு நடத்த வேண்டும்.
அமைதியான முறையில், தங்களது கருத்தை வெளிப்படுத்த விரும்பும் அரசியல் அமைப்புகள் மீதோ, தனிப்பட்ட அமைப்புகள் மீதோ, குடிமக்கள் மீதோ அடக்குமுறையைக் கையாளக் கூடாது என்ற கருத்தில் அமெரிக்கா உறுதியாக உள்ளது என்றார் அவர்.












Click it and Unblock the Notifications