சட்டவிரோதமாக தங்கியிருந்த பாக். பெண் விருத்தாச்சலத்தில் கைது
விருத்தாசலம்: சுற்றுலா விசாவில் கடந்த 26 ஆண்டுகளுக்கு முன்பு இந்தியா வந்து விருத்தாச்சலத்தில் சட்ட விரோதமாக தங்கியிருந்த பாகிஸ்தான் நாட்டு பெண்ணை போலீசார் கைது செய்தனர்.
விழுப்புரம் மாவட்டம், உளுந்தூர்பேட்டையை அடுத்துள்ள பாதூர் காந்தி நகரைச் சேர்ந்தவர் ராமலிங்கம். கிராம நிர்வாக அலுவலராக வேலை பார்த்து வரும் இவரின் சொந்த ஊர் விருத்தாசலம் அருகேயுள்ள முகாசபரூர் ஆகும்.
இவரது உறவுப் பெண் முத்துலட்சுமி. இவர் பாகிஸ்தான் குடியுரிமை பெற்றவர். இவரை கடந்த 1980ம் வருடம் இந்தியாவுக்கு வரவழைத்து திருமணம் செய்து கொண்டார் ராமலிங்கம்.
இத் தம்பதிக்கு தனஞ்செயன் (26), செல்வகுமார் (16) என்ற இரு மகன்களும், விஜயலட்சுமி (23), ஜான்சிராணி (18) என்ற 2 மகள்களும் உள்ளனர்.
ராமலிங்கம், முத்துலட்சுமி தம்பதியினருக்கிடையே கடந்த 15 வருடங்களுக்கு முன்பு ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் கணவன் மற்றும் குழந்தைகளை விட்டு பிரிந்து சென்ற முத்துலட்சுமி விருத்தாசலத்தில் தனியாக வசித்து வந்தார்.
இந்நிலையில் இவர் விழுப்புரம் மாவட்ட எஸ்பியிடம் தனது விசா காணாமல் போய் விட்டதாக புகார் அளித்தார்.
இது தொடர்பாக நடந்த விசாரணையில், பாகிஸ்தானில் இருந்து சுற்றுலா விசாவில் இந்தியா வந்த முத்துலட்சுமி தனது விசாவை புதுப்பிக்காமல் ராமலிங்கத்தை திருமணம் செய்துகொண்டது தெரிய வந்தது. இதையடுத்து அவரை போலீஸார் கைது செய்தனர்.












Click it and Unblock the Notifications