மழையால் நிவாரணப் பணிகளை தீவிரப்படுத்த வேண்டும் - கிருஷ்ணசாமி
சென்னை: தமிழகத்தில் மழையால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் போர்க்கால அடிப்படையில், அரசு விரைந்து செயல்பட்டு நிவாரணப் பணிகளை தீவிரப்படுத்த வேண்டும் என்று மாநில காங்கிரஸ் தலைவர் எம்.கிருஷ்ணசாமி கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
தமிழகம் முழுவதும் கடந்த 2 நாட்களாக கடும் மழை பெய்து வருகிறது. இந்த மழைக்கு 13 மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
பலர் இதில் உயிரிழந்துள்ளனர். பல்லாயிரக்கணக்கான ஏக்கர் பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளன.
கடலோர மாவட்டங்களில் பெய்து வரும் மழையால் ஏழைகள், கூலித் தொழிலாளர்கள், விவசாயிகள், மீனவர்கள் உள்ளிட்டோர் எந்த வேலைக்கும் செல்ல முடியாமல் மிகவும் கஷ்டப்பட்டு வருகிறார்கள்.
மழையால் பாதிக்கப்பட்ட அனைத்து மாவட்டங்களிலும் நிவாரண மையங்களை அமைக்க வேண்டும். பாதிக்கப்பட்டவர்களுக்கு உணவும், தங்குமிட வசதியும் செய்து தரப்பட வேண்டும். தொற்று நோய்கள் ஏதும் பரவாமல் இருக்க மழையால் பாதிக்கப்பட்ட கிராமங்களுக்கு மருத்துவக் குழுவை அனுப்ப வேண்டும்.
பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகள் சரிவர செல்வதை அரசு உறுதி செய்ய வேண்டும். அதில் தாமதம் ஏற்பட அரசு அனுமதிக்கக் கூடாது.
அனைத்து துறை அதிகாரிகளையும், பாதிக்கப்பட்ட மாவட்டங்களுக்கு சென்று உடனடி நிவாரண உதவிகளை அளிக்க அரசு உத்தரவிட வேண்டும் என்று கிருஷ்ணசாமி கூறியுள்ளார்.
-
"உங்களுக்கு 3 நாள் தான் டைம்.. உடனே காலி பண்ணுங்க.." காங்கிரஸுக்கு அதிர்ச்சி கொடுத்த நோட்டீஸ் -
அடித்து ஆடிய எடப்பாடி.. திமுக கேம்பில் எதிர்பார்க்காத குளறுபடி.. ஸ்டாலின் மனதில் என்ன இருக்கிறது?.. -
ஆதவ் அர்ஜூனா போட்ட குண்டு.. தூக்கி அடிக்கப்பட்ட காங்கிரஸ் மாநில பொதுச் செயலாளர் செல்வம் -
எண்ணி 2 நாள்.. காங்கிரஸ் முக்கிய நிர்வாகிகள் தவெகவில் இணைவார்கள்.. குட்டையை குழப்பும் ஆதவ் அர்ஜுனா -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா?












Click it and Unblock the Notifications