உசிலம்பட்டியில் சாலை மறியல்-போலீஸ் தடியடி, கல்வீச்சு
மதுரை: மதுரை அருகே உசிலம்பட்டியில் சாலை மறியல் செய்த மக்கள் மீது போலீஸ் தடியடி நடத்தியதால் பொது மக்கள் போலீசார் மீது நோக்கி கல்வீச்சு நடத்தினர்.
மதுரை மாவட்டம், உசிலம்பட்டி அருகே ஏரவாப்பட்டி என்ற ஊரில் கடந்த வருடம் உள்ளாட்சி தேர்தல் நடந்தது. அதில் கணேசன் என்பவர் மனைவி ஒச்சம்மாளும், சேகர் என்பவரது மனைவி திலகராணியும் பேட்டியிட்டனர்.
இதில் ஒச்சம்மாளுக்கு தேர்தல் ஏஜெண்டாக தெத்துப்பட்டி குணசேகரன் என்பவரும், திலகராணிக்கு தேர்தல் ஏஜெண்டாக சேகரும் பணியாற்றினர். அந்த தேர்தலில் ஒச்சம்மாள் வெற்றி பெற்றார்.
இந் நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை சேகர் அடியாட்களுடன் வந்து குணசேகரனை தாக்கினார். இது குறித்து குணசேகரன் போலீசில் புகார் செய்தார். ஆனால் இந்த புகாரின் மீது எந்தவித நடவடிக்கையும் போலீசார் எடுக்காததால் உசிலம்பட்டி- விக்ரமங்கலம் சாலையில் தனது ஊரைச் சேர்ந்த பொது மக்களுடன் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டார்.
தகவல் அறிந்த மதுரை எஸ்.பி. அன்பு சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பொது மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி அவர்களை கலைந்து போகும்படி கூறினார். ஆனால் மறியலில் ஈடுபட்டவர்கள் எஸ்பியின் பேச்சை அலட்சியப்படுத்தி தொடர்ந்து மறியலில் ஈடுபட்டனர். இதனால் போலீசார் சாலை மறியலில் ஈடுபட்ட மக்கள் மீது தடியடி நடத்தினர்.
இதனால் ஆத்திரம் அடைந்த மக்கள் போலீசார் மீது கற்களை வீசி தாக்கியதில் 8 போலீசார் படுகாயமடைந்து மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த சம்பவத்தால் உசிலம்பட்டி-விக்ரமங்கலம் சாலையில் சுமார் 3 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. அப்பகுதியில் மேலும் அசம்பாவிதம் ஏற்படாமல் இருக்க போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
-
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
தங்கம் வைத்திருப்போருக்கு பெரிய மாற்றம்! ஏப் 1 முதல் 6 டிஜிட் HUID கட்டாயம்! உங்க பழைய நகை என்னாகும் -
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்?












Click it and Unblock the Notifications