போலி சாமியார்கள்-உளவுப் பிரிவு ரகசிய சர்வே
Subscribe to Oneindia Tamil
சென்னை: தமிழகத்தில் போலி சாமியார்களால் பெண்கள் ஏமாற்றப்பட்டு வருவதும் கற்பழிப்புகள் நடந்து வருவதையும் தொடர்ந்து போலிகளை அடையாளம் காணுமாறு போலீசாருக்கு காவல்துறை தலைமையகம் உத்தரவிட்டுள்ளது.
இதையடுத்து மாநிலம் முழுவதும் போலிச் சாமியார்கள் குறித்த கணக்கெடுப்பு ரகசியமாக நடந்து வருகிறது.
இந்தப் பணியில் உளவு பிரிவு போலீசார் இறங்கியுள்ளனர். போலி சாமியார்கள் எனக் கருதப்படுவோர் குறித்த பட்டியல் தயாரிக்கப்பட்டு வருகிறது.
இவர்கள் மீது ஏற்கனவே காவல் நிலையங்களில் புகார்கள் ஏதும் உள்ளனவா என்றும் விசாரிக்கப்பட்டு வருகிறது.
உளவுப் பிரிவினர் தரும் தகவல்களின் அடிப்படையில் போலிகள் மீது அந்தந்தப் பகுதி காவல் நிலையங்கள் நடவடிக்கை எடுக்கும் எனத் தெரிகிறது.












Click it and Unblock the Notifications