For Daily Alerts
Just In
பாளையங்கோட்டை வீதியில் கிடந்த பச்சிளங் குழந்தை
நெல்லை: பாளையங்கோட்டையில் வீதியில் கிடந்த பச்சிளங் குழந்தையை போலீசார் மீட்டனர்.
பாளையங்கோட்டை கே.டி.சி நகர் மங்கம்மாள் சாலையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனை அருகில் நேற்றிரவு குழந்தையின் அழுகுரல் கேட்டது.
அருகில் சென்று பார்த்தபோது பிறந்து 10 தினங்களே ஆன பெண் குழந்தை அழுது கொண்டிருந்தது. குளிரில் நடுங்கிக் கொண்டிருந்த அக்குழந்தைக்கு அப்பகுதி மக்கள் ஸ்வெட்டர் அணிவித்து, விளையாட்டு காட்டி அழுகையை நிறுத்தினர்.
குழந்தை ஒன்று அநாதையாக கிடந்த தகவல் அறிந்ததும், போலீசார் விரைந்து வந்து அதை மீட்டனர். பிறந்து சுமார் 10 நாட்களே ஆன நிலையில் வீதியில் வீசப்பட்ட அந்த குழந்தையை சரணாலயம் குழந்தைகள் காப்பகத்தில் போலீசார் ஒப்படைத்தனர்.
Story first published: Thursday, December 27, 2007, 12:09 [IST]