வாரிசு யார்? பெனாசிர் உயில்!
இஸ்லாமாபாத்: தனக்குப் பின்னால் பாகிஸ்தான் மக்கள் கட்சியின் தலைவராக யார் வர வேண்டும் என்பதை உயிலில் பெனாசிர் எழுதி வைத்துள்ளதாக அவரது கணவர் ஆசிப் அலி சர்தாரி கூறியுள்ளார். இந்த உயில் இன்று படிக்கப்படவுள்ளது.
பெனாசிர் பூட்டோவுக்குப் பின்னர் பாகிஸ்தான் மக்கள் கட்சியை வழி நடத்திச் செல்லப் போவது யார் என்ற கேள்வி விஸ்வரூபமெடுத்துள்ளது.
இதுகுறித்து பெனாசிரின் கணவர் ஆசிப் அலி சர்தாரி கூறுகையில், தனக்குப் பின்னால் கட்சியை யார் வழி நடத்திச் செல்ல வேண்டும் என்பதை பெனாசிர் பூட்டோ உயில் மூலம் தெளிவாக எழுதி வைத்துள்ளார்.
இந்த உயில் ஞாயிற்றுக்கிழமை பகிரங்கமாக படிக்கப்படும். இதற்காக கூட்டம் ஒன்றைக் கூட்டியுள்ளோம். அவர் உயிலில் கூறியுள்ளதை அனைவருக்கும் படித்துக் காட்டுவோம் என்று கூறினார் சர்தாரி.
பாகிஸ்தான் மக்கள் கட்சியின் அடுத்த தலைவராக, பெனாசிர் குடும்பத்தைச் சேர்ந்தவர்தான் அனேகமாக பொறுப்பேற்கக் கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications