கிராமத்து பொங்கலை கண் முன் நிறுத்திய நெல்லை மாணவர்கள்

Subscribe to Oneindia Tamil


நெல்லை: லை குடிசை, மாட்டு வண்டி, சரசரக்கும் பட்டு வேட்டி, பாவடை சட்டையுடன் பொங்கல் வைத்து, நெல்லை, பாளையங்கோட்டை புஷ்ப லதா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவ, மாணவிகள் வித்தியாசமாக கொண்டாடிய பொங்கல் விழா வெகுவாக கவர்ந்தது.

தங்களுக்கு உதவிய இயற்கைக்கு நன்றி கடன் செலுத்தும் வகையில் அதற்கு விளை பொருட்களை படைத்து வணங்கும் மண்வாசனை கொண்ட திருநாள் தைபொங்கல்.

இந்த திருநாளில் கிராமத்து வாசிகள் உற்சாகமாக ஜாதி, மத போதமின்றி மண்பானையில் பொங்கலிட்டு மகிழ்ச்சியை பகிர்த்துக் கொள்வார்கள்.

இதே பாணியை கையாண்ட பாளை புஷ்பலதா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவ, மாணவிகள் பள்ளி வாளகத்தில் ஓலை குடிசை அமைத்தனர். மைதானம் முழுவதும் வண்ண கோலமிட்டனர்.

ஆங்கங்கே கரும்புகளால் தோரணம் கட்டினர். மேலும் ராஜகோபாலபுரத்தில் உள்ள பெருமாள் என்ற விவசாயியை குடும்பத்துடன் அழைத்தனர். அவரும் மாட்டு வண்டி சகிதம் வந்து இறங்கினார்.

இதற்குதான் காத்திருந்தது போல் பட்டு வேஷ்டி, பாவடை சட்டையுடன் இருந்த மாணவ, மாணவிகள் ஆட்டம் பாட்டம் என்று விவசாயியுடன் பொங்கல் வைத்து கொண்டாடினர்.

அவர்கள் உற்சாகத்தில் பள்ளி நிர்வாகி மரகதவள்ளி, தாளாளர் புஷ்ப லதா பூரணன் உள்ளிட்ட ஆசிரிய பெருமக்களும் பங்கெடுத்தனர்.

ஆதிதமிழனிடம் இருந்த ஜாதி, மத பேதமற்ற ஒற்றுமை மாணவர்கள் கொண்டாடிய பொங்கல் திருவிழாவிலும் காண முடிந்தது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+