செளதி-மகளை கொன்ற தந்தை-2வது மனைவி தலையை வெட்டி கொலை
துபாய்: செளதி அரேபியாவில் முதல் மனைவியின் 9 வயது மகளை கொடுமைப்படுத்தி கொலை செய்த தந்தை, இரண்டாவது மனைவி ஆகியோர் பொது மக்கள் முன்னிலையில் தலையை வெட்டிக் கொல்லப்பட்டனர்.
அகமத் ஹாஜி என்பவர் தனது முதல் மனைவியை விவாகரத்து செய்தார். முதல் மனைவி மூலம் பிறந்த 9 வயதான மகள் கோசுனை தனது கட்டுப்பாட்டில் எடுத்துக் கொண்டார். இதையடுத்து இமான் என்ற இன்னொரு பெண்ணை திருமணம் செய்து கொண்டார்.
ஆனால், ஹாஜியும் இமானும் சேர்ந்து கோசுனை தொடர்ந்து அடித்து, உதைத்து துன்புறுத்தி வந்தனர். ஒரு கட்டத்தில் முதல் மனைவி மீது இருந்த கோபத்தில் கோசுனை அடித்தே கொன்றுவிட்டனர்.
இதையடுத்து கோசுனின் தாயார் வழக்குத் தொடர்ந்தார். இதை விசாரித்த செளதி நீதித்துறை ஹாஜியையும் இமானையும் பொது மக்கள் முன்னிலையில் தலையை வெட்டிக் கொலை செய்ய உத்தரவிட்டது. இதைத் தொடர்ந்து இந்த தண்டனை நிறைவேற்றப்பட்டது.












Click it and Unblock the Notifications