For Daily Alerts
Just In
தீவிரவாதம்-ஸ்பெயினில் 2 இந்தியர்கள் கைது
டெல்லி: ஸ்பெயின் நாட்டில் தீவிரவாத செயல்களில் ஈடுபட முயன்றதாக இரு இந்தியர்கள், 12 பாகிஸ்தானியர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இதையடுத்து அந்த இந்தியர்கள் குறித்த முழு விவரத்தை ஸ்பெயினிடம் மத்திய அரசு கோரியுள்ளது.
ஸ்பெயினில் தீவிரவாத தாக்குதல் நடத்த முயன்றதாக கடந்த வாரத்தில் இவர்களை பார்சிலோனா போலீசார் கைது செய்தனர். ஆனால், அவர்களது விவரங்களை வெளியிடவில்லை.
இதையடுத்து இந்தியர்கள் குறித்த விவரத்தைத் தருமாறு ஸ்பெயினில் உள்ள இந்திய தூதரகத்துக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளதாக வெளியுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜி தெரிவித்துள்ளார்.
Comments
Story first published: Monday, January 21, 2008, 15:55 [IST]