மேலும் 2 விடுதலைப் புலிகளின் ஏஜென்டுகள் கைது
சென்னை: தமிழகத்தில் மேலும் 2 விடுதலைப் புலிகளின் ஏஜென்டுகள் கைது செய்யப்பட்டுள்ளனர். மாநிலம் முழுவதும் உள்ள இலங்கை அகதிகள் முகாம்களில் தீவிர சோதனை முடுக்கி விடப்பட்டுள்ளது.
சென்னையில் கடந்த வாரம் விடுதலைப் புலிகளின் உளவுப் பிரிவைச் சேர்ந்த நாதன் என்கிற தம்பிதுரை பரமேஸ்வரன் என்பவர் சிக்கினார். அவருக்கு உதவியாக இருந்த 7 இலங்கைத் தமிழர்களும் கைது செய்யப்பட்டனர்.
வட கிழக்கு மாகாண முன்னாள் முதல்வர் வரதராஜ பெருமாளைக் கொலை செய்யும் நோக்கத்துடன் இவர்கள் இருந்தது தெரிய வந்தது.
இந்த நிலையில் நாதனுக்கு உதவி புரிந்த மேலும் 2 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர். மன்னார்குடியைச் சேர்ந்த செல்வராஜ் (62) மற்றும் ரெஜினால்ட் ஆகியோர் கைது செய்யப்பட்டவர்கள் ஆவர்.
இருவரும் நாதனுக்கு, வெடிகுண்டுகள் தயாரிக்கத் தேவையான இரும்பு உருளைகள், பிளாஸ்டிக் உருளைகளை வாங்கிக் கொடுத்துள்ளனர் என குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
நாதன் போலீஸாரிடம் கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில் இந்த இருவரும் சிக்கினர்.
மும்பையிலிருந்து நேற்று காலை சென்னைக்கு வந்தார் செல்வராஜ். சென்டிரல் ரயில் நிலையத்தில் ரயிலில் வந்து இறங்கிய அவர் மதுரைக்குப் போவதற்காக எழும்பூர் ரயில் நிலையம் வந்தார். அப்போது போலீஸார் அவரைக் கைது செய்தனர்.
விருதுநகரில் வைத்து ரெஜினால்டை போலீஸார் கைது செய்தனர்.
செல்வராஜ் வைத்திருந்த 2 பாக்கெட் சாம்பிள் இரும்பு உருளைகள், ரூ. 7000 பணம், 2 செல்போன்கள் ஆகியவற்றை போலீஸார் பறிமுதல் செய்தனர்.
தமிழகத்தில் அடுத்தடுத்து விடுதலைப் புலிகளும், அவர்களுக்கு உதவி செய்யும் ஏஜென்டுகளும் பிடிபட்டு வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதற்கிடையே, தமிழகம் முழுவதும் உள்ள அகதிகள் முகாம்களில் போலீஸார் சோதனையை முடுக்கி விட்டுள்ளனர். அனைத்து முகாம்களிலும் தீவிர சோதனை நடத்துமாறு அரசு உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து அகதிகள் மறுவாழ்வுத்துறை ஆணையர் கற்பூர சுந்தரபாண்டியனின் நேரடிக் கண்காணிப்பில் இந்த சோதனைகள் நடத்தப்பட்டு வருகின்றனர்.
-
இன்று முதல் அடுத்த ஒரு வாரத்துக்கு மழை பிச்சு உதறும்..தென் தமிழகத்திற்கு அலர்ட் கொடுத்த வானிலை மையம் -
தங்கம் ரூ.3000, வெள்ளி ரூ.14000 சரிவு.. மீண்டும் பல்டி அடித்தால் மக்கள் கொண்டாட்டம்..! -
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா -
வடபழனி- பூந்தமல்லி மெட்ரோ ரயில் சேவை உறுதியானது.. மேற்கு சென்னைக்கு மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
சிறகடிக்க ஆசை: முத்து- மீனா சொன்ன மகிழ்ச்சி செய்தி! கேக் கொடுத்து கொண்டாட்டம்! மனம் மாறிய விஜயா! -
முடியாதுனு முடியாது.. கட் அண்ட் ரைட்டாக பேசிய அண்ணாமலை! விடிய விடிய பேசிய கோயல்! கடைசி சான்ஸ்? -
செங்கோட்டையன் வீட்டிற்கே கிளம்பி செல்லும் விஜய்.. கடுப்பான ஆதவ் அர்ஜுனா, புஸ்ஸி? என்ன நடக்குது? -
அதிமுக, தமிழக வெற்றிக் கழகம்.. மொத்தமாக கேம் ஓவர்.. அடித்து சொல்லும் 3 பெரிய கருத்து கணிப்புகள்! -
அமெரிக்காவை ஏமாற்றிய டிரம்ப்.. எல்லாமே ஒரு லிமிட் தான்.. அடுத்து என்ன! உற்று பார்க்கும் உலக நாடுகள்












Click it and Unblock the Notifications