For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

267 சட்டவிரோத இந்தியத் தொழிலாளர்கள் ஷார்ஜாவில் கைது

By Staff
Google Oneindia Tamil News


ஷார்ஜா: ஷார்ஜாவில் முறையான ஆவணங்கள் இன்றி வேலை பார்த்து வந்த 267 இந்தியத் தொழிலாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

முறையான குடியேற்ற மற்றும் ஒர்க் பெர்மிட் இல்லாமல் வேலை பார்த்து வரும் வெளிநாட்டுத் தொழிலாளர்களை கைது செய்யும் நடவடிக்கையை ஷார்ஜா குடியேற்றத் துறை அதிகாரிகளும், போலீஸாரும் இணைந்து மேற்கொண்டனர்.

இந்த நடவடிக்கையில், முறையான ஆவணங்கள் மற்றும் அடையாள அட்டை இல்லாமல் பணியாற்றிய 67 இந்தியர்கள் உள்பட 267 பேர் சிக்கினர்.

இவர்கள் அனைவரும் விசிட் விசாவில் ஐக்கிய அரபு எமிரேட்ஸுக்கு வந்துள்ளனர். இவர்களில் சிலருக்கு தங்குமிட விசா உள்ளது. ஆனால் பல ஆண்டுகளுக்கு முன்பே அவை காலாவதியாகி விட்டன. அவற்றை அவர்கள் புதுப்பிக்காமல் இருந்துள்ளனர். சிலர் தங்களது ஸ்பான்சர்கள் தவிர மற்றவர்களுக்காகவும் வேலை பார்த்து வந்துள்ளனர். அனைவரும் விசாரணைக்கு அனுப்பப்பட்டுள்ளனர்.

தற்போது ஐக்கிய அரபு எமிரேட்ஸில் பொது மன்னிப்பு வழங்கும் திட்டம் முடிந்து விட்டதால், கைது செய்யப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிகிறது. அவர்களுக்கு பெருமளவில் அபராதம் விதிக்கப்படக் கூடும்.

தொழிலாளர்களுக்கு மட்டுமல்லாமல், அவர்களுக்கு வேலை கொடுத்தவர்களுக்கும் பெரும் அபராதம் விதிக்கப்படும் என காவல்துறை தெரிவித்துள்ளது.

ஷார்ஜாவில் உள்ள பல்வேறு இடங்களில் நடந்த சோதனையில் 267 பேரும் கைது செய்யப்பட்டனர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X