சென்னை விமான நிலையத்தில் பயணி மரணம்
Subscribe to Oneindia Tamil
சென்னை: அகர்தலாவைச் சேர்ந்த பயணி சென்னை விமான நிலையத்தில் மாரடைப்பால் இறந்தார்.
அகர்தலாவைச் சேர்ந்தவர் சோம்நாத் தத்தா (34). இவர் புற்றுநோய்க்கு சிகிச்சை எடுத்துக் கொள்வதற்காக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு வந்தார்.
சிகிச்சை முடிந்து மீண்டும் கொல்கத்தா வழியாக அகர்தலா செல்ல விமான நிலையத்திற்கு வந்தார். வீல் சேரில் அவரை அவரது மனைவி மற்றும் தாயார் அழைத்து வந்தனர்.
விமானத்தில் ஏற சில நிமிடங்களை இருந்த நிலையில் திடீரென சோம்நாத்துக்கு மாரடைப்பு ஏற்பட்டது. உடனடியாக டாக்டர்கள் வரவழைக்கப்பட்டனர். சோம்நாத்தைப் பரிசோதித்த டாக்டர்கள் அவர் இறந்து விட்டதாகத் தெரிவித்தனர்.












Click it and Unblock the Notifications