எலிவேட்டரில் சிக்கி இறந்த பிரெஞ்சு பெண் குடும்பத்துக்கு ரூ.16.5 லட்சம் நஷ்ட ஈடு
டெல்லி: விமான நிலைய எலிவேட்டரில் சிக்கி இறந்த பிரெஞ்சு பெண்ணின் குடும்பத்துக்கு ரூ. 16.5 லட்சம் நஷ்ட ஈடு தர வேண்டும் என்று தேசிய நுகர்வோர் ஆணையம் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து இந்திய விமான நிலைய ஆணையம் தொடர்ந்த வழக்கை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
பிரான்ஸ் நாட்டை சேர்ந்த ஜோத்ஸனா ஜெதானி என்பவர் கடந்த 1999ம் ஆண்டு டிசம்பர் 12ம் தேதி துபாயில் இருந்து இந்தியாவுக்கு ஏர்-இந்தியா விமானம் மூலம் வந்தார்.
அவர் விமானத்தில் இருந்து இறங்கும் போது நகரும் படிக்கட்டுகளில் (எலிவேட்டர்) சிக்கி உயிரிழந்தார்.
இதையடுத்து, விமான நிலையத்தின் அலட்சியப் போக்கால்தான் இந்த விபத்து ஏற்பட்டது. எனவே இந்திய விமான நிலைய ஆணையம், ரூ. 1.5 கோடி நஷ்ட ஈடு தர வேண்டும் என்று கோரி தேசிய நுகர்வோர் ஆணையத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
இந்த வழக்கை விசாரித்த நுகர்வோர் ஆணையம் கடந்த 2004ம் ஆண்டு ஆகஸ்ட் 5ம் தேதி அளித்த தீர்ப்பில், ஜெதானியின் குடும்பத்தாருக்கு விமான நிலைய ஆணையம் ரூ.16.5 லட்சம் நஷ்ட ஈடு கொடுக்க வேண்டும் என உத்தரவிட்டது.
இதை எதிர்த்து விமான நிலைய ஆணையம், உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தது.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி பி.என்.அகர்வால் விமான நிலைய ஆணையத்தின் மனுவை தள்ளுபடி செய்தார். நுகர்வோர் ஆணையம் உத்தரவிட்டபடி, ஜெதானியின் குடும்பத்தினருக்கு உடனடியாக நஷ்டஈட்டு தொகையை வழங்க உத்தரவிட்டார்.












Click it and Unblock the Notifications