லண்டனில் இலங்கை தமிழர்கள் போராட்டம்
லண்டன்: இலங்கையில் தமிழர்கள் மீதான தாக்குதலை உலக நாடுகளுக்கு எடுத்துணர்த்தும் வகையில் லண்டனில், பிரதமரின் அதிகாரப்பூர்வ இல்லம் அருகே தமிழ் இளைஞர்கள் அமைப்பின் சார்பில் 4ம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
இங்கிலாந்து பிரதமரின் அதிகாரப்பூர்வ இல்லம் அமைந்துள்ள எண் 10, டவுனிங் தெருவில் 4ம் தேதி முற்பகல் 11 மணிலிருந்து பிற்பகல் 3 மணி வரை இந்த ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் தமிழர்கள் மீது நடந்து வரும் தாக்குதல்கள், பட்டினிச் சாவுகள், கடத்தல்கள், கொலைகள் உள்ளிட்டவற்றை உலக நாடுகளுக்கு எடுத்துணர்த்தும் வகையில் இந்த போராட்டம் நடத்தப்படுவதாக இங்கிலாந்து தமிழ் இளைஞர்கள் அமைப்பு அறிவித்துள்ளது.
இங்கிலாந்தில் உள்ள தமிழர்கள் பெருமளவில் திரண்டு இந்தப் போராட்டத்தில் கலந்து கொள்ளுமாறும் அந்த அமைப்பு அழைப்பு விடுத்துள்ளது.












Click it and Unblock the Notifications