காதலர் தினத்தன்று எல்லை மீறினால்..: போலீஸ் கடும் எச்சரிக்கை

Subscribe to Oneindia Tamil

Cupid
சென்னை: காதலர் தினத்தன்று பொது இடங்களில் காதலர்கள் எல்லை மீறி நடந்து கொண்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் சென்னை மாநகர காவல்துறை ஆணையர் நாஞ்சில் குமரன் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

வரும் பிப்ரவரி 14ம் தேதி (வியாழக்கிழமை) காதலர் தினம் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி சென்னையில் உள்ள பிரபல ஹோட்டல்களில் பல்வேறு ஆடல்-கூத்து நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

வழக்கமாக காதலர் தினத்தன்று மெரீனா பீச், பெசன்ட் நகர் பீச், கிழக்கு கடற்கரை சாலை, மகாபலிபுரம் கடற்கரை ஆகியவை காதலர்களின் எல்லை மீறலால் படாதபாடுபடும்.

இந் நிலையில் சாலைப் பாதுகாப்பு வார விழாவில் கலந்து கொண்ட போலீஸ் கமிஷ்னர் நாஞ்சில் குமரன் கூறியதாவது,

காதலர் தினத்தன்று சிறப்பு கட்டுப்பாடுகள் எதுவும் விதிக்கப்படவில்லை. ஆனால் அன்றைய தினம் கொண்டாட்டம் என்ற பெயரில் எல்லை மீறுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

இரு சக்கர வாகனங்களில் செல்பவர்கள் பாதுகாப்புடன் செல்ல வேண்டும் எனவும் அறிவுறுத்தியுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+