சிறையிலிருந்து பரோலில் வந்த கைதி மனைவியுடன் தற்கொலை
Subscribe to Oneindia Tamil
புதுச்சேரி: பரோலில் வெளி வந்த கைதி, தனது மனைவியுடன் தற்கொலை செய்து கொண்டார்.
புதுச்சேரி லாஸ்பேட்டையைச் சேர்ந்தவர் கனகராஜ் (37). இவர் கொலை வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டவர்.
சிறையில் அடைக்கப்பட்டிருந்த அவர் பரோலில் வெளியே வந்திருந்தார். இந்த நிலையில் நேற்று கனகராஜ், அவரது மனைவி நாகலட்சுமி (33) ஆகியோர் வீட்டில் தூக்குப் போட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.
தற்கொலை செய்வதற்கு முன்பு தங்களது மகன் அஜீத் குமாரை (10) வெளியே அனுப்பி வைத்துள்ளார் கனகராஜ்.
கனகராஜ் சிறையில் இருந்து வருவதால் குடும்பம் நடத்த போதிய வருவாய் இல்லாததால் மனம் உடைந்து மனைவியுடன், கனகராஜ் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் எனத் தெரிகிறது.












Click it and Unblock the Notifications