இந்து முன்னணி நிர்வாகி கொலை: பதட்டம்!
நாகர்கோவில்: கன்னியாகுமரியில் இந்து முன்னணி நிர்வாகி ஒருவர் படுகொலை செய்யப்பட்டார்.
கன்னியாகுமரி மாவட்டம், இரணியலை அடுத்த திருவிடைக்கோட்டையை சேர்ந்தவர் தாணுப் பிள்ளை. இவர் இந்து முன்னனி அமைப்பில் குருந்தன்கோடு ஒன்றியச் செயலாராக உள்ளார்.
இவர் மீது காவல் நிலையத்தில் கொலை மற்றும் அடிதடி வழக்குகள் உள்ளன. இந் நிலையில் பூலான்கோடு என்ற இடத்திற்கு அருகில் ரயில் தண்டவாளத்தில் தாணுப் பிள்ளை மர்மான முறையில் இறந்து கிடந்தார்.
அவரது தலை மற்றும் உடலில் சில இடங்களில் வெட்டுக்காயங்கள் இருந்தன. அவர் வெட்டி கொலை செய்யப்பட்டுள்ளார்.
இதையடுத்து தாணுப் பிள்ளையின் உறவினர்கள் இந்த கொலையில் சம்பந்தப்பட்டவர்களை உடனே கைது செய்ய வேண்டும் என்று கோரி மாவட்ட எஸ்.பி. சந்தோஷ்குமாரிடம் மனு கொடுத்துள்ளனர்.
இந்த சம்பவத்தால் கன்னியாகுமரி மாவட்டத்தில் பதட்டம் காணப்படுகிறது.