இளம் பெண்ணுடன் சென்ற இன்ஸ்பெக்டர் விபத்தில் பலி
தூத்துக்குடி: இளம் பெண்ணுடன் பைக்கில் சென்ற தூத்துக்குடி கண்ட்ரோல் ரூம் இன்ஸ்பெக்டர் விபத்தில் பலியானார்.
நாகர்கோவிலை சேர்ந்தவர் மாரியப்பன் தூத்துக்குடி மாவட்ட போலீஸ் கட்டுபாட்டு அறையில் இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்தார். நேற்றிரவு இளம்பெண் ஓருவருடன் நெல்லையில் இருந்து தூத்துக்குடிக்கு பைக்கில் சென்று கொண்டிருந்தார்.
வல்லநாடை அருகே சென்றபோது நிலை தடுமாறி பைக் ரோட்டோரத்தில் இருந்த பாலத்தில் மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட மாரியப்பன் படுகாயமடைந்தார். அவருடன் சென்ற இளம்பெண் லேசான காயம் அடைந்தார்.
நெடுஞ்சாலை துறை ரோந்து போலீசார் இருவரையும் மீட்டு தூத்துக்குடியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு இன்று காலை மாரியப்பன் இறந்தார். அவருடன் வந்த பெண்ணுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்படுகிறது.
அந்த பெண் முக்கூடலை சேர்ந்த செண்பக குமாரி என்று தெரியவந்துள்ளது.












Click it and Unblock the Notifications