அதிபர் பதவியிலிருந்து விலக முஷாரப் திடீர் முடிவு!!!

பாகிஸ்தான் தேர்தலில் முஷாரப் ஆதரவு பெற்ற பாகிஸ்தான் முஸ்லீம் லீக் (க்யூ) பெரும் தோல்வி அடைந்தது. எதிர்க்கட்சிகளான பாகிஸ்தான் மக்கள் கட்சியும், நவாஸ் ஷெரீப்பின் பாகிஸ்தான் முஸ்லீம் லீக் கட்சியும் பெரும் வெற்றி பெற்றுள்ளன.
தேர்தலில் தோல்வி அடைந்தாலும் கூட பெனாசிரின் கணவர் ஆசிப் அலி சர்தாரியை தனது பக்கம் இழுத்து, க்யூ பிரிவு முஸ்லீம் லீக் கட்சியுடன் கூட்டணி அமைக்க வைத்து ஆட்சியமைக்க முஷாரப் தரப்பு முயன்றது. ஆனால் முஷாரப்பின் கோரிக்கையை ஆசிப் அலி சர்தாரி நிராகரித்து விட்டார்.
நவாஸ் ஷெரீப்புடன் இணைந்து பாகிஸ்தான் மக்கள் கட்சி ஆட்சி அமைக்க தீர்மானித்துள்ளது. இருப்பினும் பிரதமராக யாரை நியமிப்பது என்பது குறித்து இரு கட்சிகளுக்கும் இடையே இன்னும் ஒருமித்த கருத்து ஏற்படவில்லை.
இந்த நிலையில் அதிபர் பதவியிலிருந்து விலக முஷாரப் தீர்மானித்து விட்டதாக கூறப்படுகிறது. ஆரம்பத்திலிருந்தே பதவி விலக மாட்டேன் என கூறி வந்தார் முஷாரப். இந்த நிலையில், தற்போது பதவி விலக அவர் தீர்மானித்து விட்டதாக கூறப்படுகிறது.
இதற்கு, பெனாசிர் கட்சியும், ஷெரீப் கட்சியும் கூட்டணி ஆட்சி அமைத்த பின்னர் முதல் வேலையாக தன்னை நம்பிக்கை இல்லாத் தீர்மானம் மூலம் வீட்டுக்கு அனுப்பி வைத்து விடுவார்கள் என்று எண்ணுவதே முக்கிய காரணம்.
அப்படிப் போவதை விட தானாக பதவி விலகி விட முஷாரப் முடிவு செய்துள்ளார். இதைத் தவிர அவருக்கு வேறு வழி இல்லை என்று பாகிஸ்தான் மீடியாக்களில் செய்திகள் வெளியாகியுள்ளன.
தனது ராஜினாமா குறித்து தீவிரமாக அவர் விவாதித்துக் கொண்டிருப்பதாகவும், இன்னும் சில நாட்களில் இதுகுறித்த அறிவிப்பை அவர் வெளியிடக் கூடும் என்றும் தெரிகிறது.
நல்ல மரியாதையோடு பதவியிலிருந்து விலக முஷாரப் தீர்மானித்துள்ளார் என அந்த செய்திகள் கூறுகின்றன.
அடுத்த பிரதமர் அமீன் பகீம்:
இதற்கிடையே பாகிஸ்தானின் அடுத்த பிரதமராக பெனாசிரின் பாகி்ஸ்தான் மக்கள் கட்சியைச் சேர்ந்த அமீன் பகீம் பதவியேற்பார் என்று தெரிகிறது.
இவரை பிரதமராக ஏற்க ஆட்சிக்கு ஆதரவு தரவுள்ள முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் முன் வந்துவிட்டார்.
இந் நிலையில் நிருபர்களிடம் பேசிய பகீம்,
புதிய அரசு பதவியேற்றவுடன் அதிபர் பர்வேஸ் முஷாரபுக்கு எதிராக நம்பிக்கை இல்லா கண்டனத் தீர்மானத்தை நிறைவேற்றாது என்று கூறியுள்ளார். இப்போது தான் ஜனநாயகம் மலர்ந்துள்ளது. அதற்குள் அதை சீர்குலைக்கும் எந்த வேலையையும் செய்ய மாட்டோம் என்றார்.
ஆனால், அரசு பதவியேற்றவுடன் முதல் வேலையாக முஷாரப்புக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றி அவரை வீட்டுக்கு அனுப்ப வேண்டும் என நவாஸ் கூறி வருவது குறிப்பிடத்தக்கது.
இந்த பிரச்சனையால் தான் கூட்டணி ஆட்சி அமைவதி்ல் இழுபறி நீடித்துக் கொண்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
-
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
நோட் பண்ணுங்க! கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கு 'செக்' - ரேஷன் கார்டில் இதை கவனிக்கலைன்னா பணம் கட்? -
கழுத்தறுத்த பாஜக..சரண்டராகும் சரத்குமார்! பஞ்சாயத்தை கூட்டிய நாட்டாமை குடும்பத்தார்! பரபர பாலிடிக்ஸ் -
பென்டகன் பிளான் ரெடி.. ஈரானுக்குள் நுழையும் அமெரிக்க வீரர்கள்! கதை மொத்தமா முடியுது! -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
பாஜக நட்சத்திர பேச்சாளர் பட்டியலில் இருந்து தமிழிசை பெயர் நீக்கம்.. பின்னணி இதுதானா? -
தப்புக் கணக்கான ராதிகாவின் முடிவு? மீண்டும் சமத்துவ மக்கள் கட்சியை தொடங்குகிறாரா சரத்குமார்?












Click it and Unblock the Notifications